ஹைக்கூக்கள் ...!

கடவுள் துணை 
வாசகத்தை வாசிப்பதற்குள் 
கிழித்துவிட்டான் எமன் !
விருந்தினர் பக்கத்தில் 
பரிமாறப்படுகிறது  
அபசகுனம் !
தூவாரங்கள் அடங்கிய உடல் 
தூர் வாருகிறது 
நோய்கள் !
கழிவை தள்ளும்
பசிக்கு ....
பலியாகிறது உலகம் !
வாழையடி வாழையாக 
வழுக்குகிறது 
வறுமை !
இறுதி ஊர்வலம் 
தொடர்கிறது 
கண்ணீர் அஞ்சலி !
வெளுத்துக்கட்டாமலும்
சாயம் போகிறது
கரை வேட்டிகள் ...!
பாலியல் வன்கொடுமை 
தடுப்பு மருந்தாக 
கருத்தடை மாத்திரை !
அவளுக்கான கோயில் 
இடம் கொடுக்க மறுக்கிறது 
ஜாதி வெறி !
அலையின் பாரத்தை 
இறக்கி வைக்கிறது 
கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145