மல்லியும் கனகாம்பரமும் |
| சேர்ந்து மணக்கையில் |
| முகர்ந்து பார்த்து |
| கூச்சலிட்டேன் |
| முத்தமிட்டது நீயோ என்று |
| உரசும் மஞ்சள் தான் அரச்சு |
| உஷ்ணம் தனை நான் மறக்க |
| உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் |
| வருடிவிட்ட தென்றலாய் |
| புல்லரிக்க வைத்தது நீயோ என்று |
| ஏழு கடல் தாண்டி |
| எல்லை மீறாது |
| நினைவுகளை தட்டியெழுப்பி |
| விட்டு செல்லும் |
| செல்போன் சிணுங்களின் மூலம் |
| ஏமாற்றி போனது நீயோ என்று |
| இன்று வரை |
| நீயோ நீயோ என்று |
| எனக்கான |
| ஏக்கங்கள் குறைந்து கொண்டே |
| போனாலும் |
| உனக்கான வாசிப்புகள் |
| அதிகரித்துக் கொண்டு |
| தான் இருக்கிறது ...! |
நீயோ நீயோ ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...