மல்லியும் கனகாம்பரமும் |
சேர்ந்து மணக்கையில் |
முகர்ந்து பார்த்து |
கூச்சலிட்டேன் |
முத்தமிட்டது நீயோ என்று |
உரசும் மஞ்சள் தான் அரச்சு |
உஷ்ணம் தனை நான் மறக்க |
உச்சி முகர்ந்த அந்த ஒரு கணம் |
வருடிவிட்ட தென்றலாய் |
புல்லரிக்க வைத்தது நீயோ என்று |
ஏழு கடல் தாண்டி |
எல்லை மீறாது |
நினைவுகளை தட்டியெழுப்பி |
விட்டு செல்லும் |
செல்போன் சிணுங்களின் மூலம் |
ஏமாற்றி போனது நீயோ என்று |
இன்று வரை |
நீயோ நீயோ என்று |
எனக்கான |
ஏக்கங்கள் குறைந்து கொண்டே |
போனாலும் |
உனக்கான வாசிப்புகள் |
அதிகரித்துக் கொண்டு |
தான் இருக்கிறது ...! |
நீயோ நீயோ ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...