மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !

Womens-Day-wallpapes-images-pic

உலகின் 
முதல் பெண் 
ஆதி வாசி 
மெல்ல மெல்ல 
ஆடை வாசியானாள் !
கிள்ளி எரியும் 
கள்ளிப் பால் 
சங்கிலிருந்து 
மீண்டும் பிறந்து 
பாரத மங்கையானாள் ! 
இறுக்க மூடிக்கொள்ளும் 
கல்விக் கண்ணை 
உருக்கமெனப் படித்து 
பலம் பெரும் பட்டதாரியானாள் ! 
சரிக்கி விழும் 
வாழ்க்கை சுமையை 
இறக்கி வைக்கும் 
பூமி தாயானாள் !
விஞ்ஞானம் மெஞ்ஞானம்
பிரித்து 
அமுதம் கடைந்து 
அகிலமே பருகும் 
வண்ணம் 
சக்தி ரூபமானாள்  !
எருதுகள் பூட்டிய 
கைகளோ இன்று 
விருதுகள் படைக்கும் 
அதிசயப் பிறவியானாள்  !
நடை உடை பாவனை 
மாறினாலும் 
நல்லொழுக்கமே 
நாட்டின் கண்ணென 
திகழும் ஒவ்வொரு 
மகளீர் களுக்கும் 
எனது
மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !  

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145