சிறுகதை - நிவாரணம் !




தீபாவளி லீவு முடிந்ததிலிருந்து சென்னையில் வரலாறு காணாத கன மழை இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டது . இன்று பள்ளிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு கட்டுரைப் போட்டி. இந்த மழையால் என்ன என்ன சேதங்கள் அதனால் என்ன நன்மை என்று ஒவ்வொருவரும் எழுதி வரவும் என்றதும் 
பூமிகா தனது பாட்டியிடம் வந்து நடந்ததைக் கூறினாள். 
அதற்கு பாட்டி சரி நீ எதைப்பற்றி எழுதப் போறாய் என்று சொல் நான் முடிந்தவரை உதவி செய்கிறேன் 
உடனே பூமிகா "நிவாரணம்" பற்றி எழுதப்போறேன் பாட்டி 
ஒ அப்படியா பலே பேஷ் பேஷ் நன்றாக எழுது இதற்கான அர்த்தம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுப்பது போல் சொல்கிறேன் எழுதிக் கொள் என்றதும் 
பூமிகா பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு பாட்டியின் அருகில் வந்தாள் 
அன்று பாஞ்சாலியின் துயிலை இழுத்து மானபங்கம் பண்ண எண்ணிய கௌரவர்களுக்கு பாடம் புகட்டவே கிருஷ்ணன் துயில் கொடுத்து பாஞ்சாலியின் மானத்தை காத்தான் அதனால் தான் பாஞ்சாலி சபதம் நடந்தது 
இன்று மழையால் பாதிக்கப்படும் மக்களின் நலன் காக்க கிருஷ்ணன் இந்த புவியில் சில மனிதர்கள் உருவில் நிவாரணம் கொடுக்கிறான் அதில் சில பல அரக்கர்கள் அதிலும் ஊ ழல் செய்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த பஞ்ச வெள்ள சபதம் தொடர்கிறது 
சரியாக சொன்னீர்கள் பாட்டி, மீண்டும் எனக்கு ஒரு சந்தேகம் 
கேள் பூமிகா 
எல்லோரும் நதிக்கு கால் இருக்கிறது என்று கூறுகிறார்களே இது உண்மையா ? 
உண்மை தான் பூமிகா 
சற்று விளக்குங்களேன் பாட்டி 
இதோ சொல்கிறேன் நதி நடந்தால் என்னவாகும் என்று காட்டவே இந்த வெள்ளம். இதில் எத்தனை கால்கள் நடக்கின்றன,ஓடுகின்றன அதிலும் சில பல மரணமும் கூட நடக்கின்றன அதனால் தான் நதி எப்போதும் படுத்துக்கிடக்கிறது நான் நடந்தால் நாடு தாங்காது என்று உணர்த்தவே இந்த கன மழை வெள்ளம் 
ஆகா அழகான விளக்கம் பாட்டி அப்படியே இந்த மழை நல்லாத கெட்டதா என்று சுருக்கமாக கூறுங்களேன் 
மழை வருவது இயல்பு அதன் வழியை மறைத்து கட்டிடங்கள் கட்டியது தவறு, நஞ்சை பூமி நான்கு போக விளைச்சலைஉருஞ்சும் தன்மை கொண்டது அதை தரிசாக்கி தண்ணீர் மண்ணை பெருசாக விலை வைத்து விற்றவன் வாழ்ந்துவிட்டான் வாங்கியவன் வீழ்ந்துவிட்டான் இப்போது விளைச்சலுக்கு தேவையான தண்ணீர் இருக்கிறது விளைய நிலம் எங்கே ?என்று கேட்கும் வானத்திடம் சண்டை போட முடியுமா ? நான் எவ்வளவு காலம் தான் மழை பொழியாமல் அடக்கி வைப்பது அதனால் நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்று அடைமழையாக வெளுத்து வாங்குகிறேன் என்று கூறுவது உங்களைப் போல் வளரும் சமுதாயத்திற்கு பாடம் புகட்டவே வந்தேன் இனியாவது திருந்துங்கள் இல்லை திருத்த முயலுங்கள் என்று கூறுவதாக உனது கட்டுரையை முடித்துக்கொள் பூமிகா என்றதும் 
பாட்டிக்கு நன்றி சொல்லி பள்ளியில் முதல் பரிசு பெற்றாள் பூமிகா 
"பாதை மறந்து வாழாதே 
பாலம் உடைந்து சாகாதே " 
இந்த கதை கூறவருவது என்னவெறால் காலத்தை விட பழிவாங்கக் கூடிய சக்தி வேறு ஒன்றும் இல்லை

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145