வறுமைக்கு வயதில்லை ...!



தட்டி விட்டேம்  
தள்ளாடும் வயதில் வரும் 
வறுமையை  - முதல் 
பல்லாடும் வாழ்க்கையில் !

அய்யோ ...
கண்ணிலடங்கா 
கண்ணீர் சொத்துக்கள் 
எண்ணிலடங்கா 
எச்சில் பருக்கைகள் 

கிழிந்த உடையில் 
கேளிக்கை பொருளாய் 
கிளையை தேடுகிறோம் 
அங்கே 

கவிஞர் கற்பனையில் 
நடிக்கும் ஹீரோக்களாய் 
கிழிந்து மடிகிறோம் 
குப்பைத் தொட்டியில் 

அங்கும் 
அவமானங்கள் தாங்காமல் 
எறிந்த புகையில் 
எழுந்து வருகிறோம் 

ஏமாற்றம் உள்ளங்கள் 
நடுவில் 
யாவரும் சாம்பல் தான்  
என்று உணர்த்த 

உணர்ந்தும் திருந்தவில்லை 
உலகம் என்றுமே ! 
ஓர் ஆச்சிரியக் குறியாய் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145