நீ மன்னிப்பாய் என்று ...!


இதழ் விரியும் முன்
இதயம் ரசித்துவிட்டதால்
புன்னகை என்றேன்

இமை திறக்கும் முன்
கண்கள் வலித்துவிட்டதால்
கண்ணீர் என்றேன்

ஆனால்
உதயம் வரும் முன்
உணர்வுகள் பிறந்ததால்
காதல் என்றேன்

அந்த காதல்
கலையும் முன் காமம்
முடிந்ததால்
தாய்மை என்றேன்

நான் என்ற சொல்
நாட்டில் நாம் என்று
மருகும் முன் மறந்துவிட்டேன்
என் மனதை
நீ மன்னிப்பாய் என்று

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145