கண்ணீர் ....!


பிறப்பிடம் தெரியவில்லை
சுரக்குமிடம் தெரியவில்லை
இருந்தும் ............
வற்றாத நீராய்
வடிந்துகொண்டே இருக்கிறது
அவரவர் கண்களில் ....!
*************************************************

அடித்தவன் ஒருவன்
அதில் .....
கையெப்பம் மிடுபவர்
எவரோ .....?
இருந்தும் கை கூலியாய்
கண்ணீர் வடிப்பான்
ஏழை .........!
*************************************************

படித்து பட்டம் வாங்கியவன்
குடித்தும் படிக்கிறான்
காதலில் தோற்ற
காயங்களை எண்ணி எண்ணி
தண்ணீரில் கண்ணீர்
குடிமகனாய் ...........!
*************************************************

கடல் கொண்ட உயிரினங்கள்
கரை கண்ட உயிர்களை
களவாடி கரை சேர்க்கும்
பிணங்களை நினைவுட்டும்
கண்ணீர் அஞ்சலிகள் ..............!
*************************************************

வாடிய உயிர்கள்
தேடிய பயிர்களை
தாங்கி நிற்கும்
வேரை நிலைப்படுத்த
நீல வானத்தின்
கண்ணீர் மழைகள் ...........!

*************************************************




No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145