கையற்ற பொம்மைகள்...!


இரு கைகள் துணையிருந்தும்
இருக்கை இல்லை எனக்கு
இருந்தும் இதயமற்ற மனிதர்களால்
இதயம் விற்று வாழ்கிறேன்
விலை மாது என்ற பெயரில்

அநியாயத்தை அறுக்க ஆசைதான்
அன்றே நான் ஆனாதையாகிவிடுவேனோ
என்ற பயத்தில் வெறும் பொம்மையாக
வாழ்கிறேன்...!

நீண்ட இடைவெளிக்கு பின்
என் நிழலாக நீயும்
உண்மையை மறைத்து
பொய்மையை நிலைக்கவைக்கும்
கைத்தடி பொம்மைக்கு
வணக்கம் சொன்னபடியே வருகிறேன்
அவரவர் வாசல் தாண்டியபடியே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145