வாழ்ந்து வாழ்ந்து வெல்கிறாள் ...!


பொழுதுகள் போனாலும் பழுதுகள்
கண்ட பசுமையில் மீண்டும்
தளிரும் மலராய் பூக்கிறாள்
பெண் .....!

அரை குறை உணவுடன்
அரக்க பறக்க வேலை சென்று

கருக்கு முறுக்கு பண்டங்களுடன்
கண்ணாய் பெற்ற பிள்ளைக்கு

தினம் வாங்கித் தந்த வள்ளலாய்
வாயை கட்டி வயிற்றை கட்டி

வாழ்க்கை என்னும் குட்டையில்
வளைந்து நெளிந்து செல்கிறாள்

இதில் துன்ப மென்னும் காற்றிலே
இன்ப மென்னும் பட்டமாய் - திசையில்லா

தாரமாய் கடவுள் தந்த பிள்ளையை
இத்தரணியில் தலை நிமிர்ந்து நடக்கவே

சட்டங்கள் பெற்ற மண்ணிலே
பல பட்டங்கள் பெற்ற தாயிமையால்...

வாழ்ந்து வாழ்ந்து வெல்கிறாள்
வாசமுள்ள பெண்மையாய் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145