தொட்டால் சிவக்கும்
பட்டாம்பூச்சியே உன்னை
கட்டி போட்டு காதல் செய்யும்
பட்டிக்காட்டு காளையை
எட்டிபார்க் இன்னும் ஏன்
வெக்கம் ...
பக்கம் வந்து பழகிபார்
வெக்கம் மெல்லாம்
சொர்க்கமாய் மாறும்
அக்கம் பக்கம் கேட்டுப்பார் ...!
துக்கமாய் தவிக்கிறேன்
தூங்காமல் என் தங்கமே
காதல் தாலாட்டு பாடவா ...!
கண்ணின் மணிபோல
காத்திடுவேன்
உன் கைத்தலம் பற்றி
பூத்திடுவேன் என்னில்
அடங்கிய ஆசைகளை
உன்னில் அரங்கேற்றுகிறேன் ....!
கருணையிருந்தால் காதல் செய்
ஜோடிப் பறவையாய் ஆடிப்பாடலாம்
சுதந்திர நாட்டில் ...!
அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete