காதல் நினைவுகள் நீந்துவதால் ...!

யாவும் அறியா பூவாக இருந்தேன் 
உன்னை கண்டபின் 
எல்லாம் அறிந்துவிட்டேன் 

பூக்கும் பூவில்கூட உன் 
புதுமுக கண்டேன் 

பார்க்கும் பறவையில் கூட 
உன் பருவராகம் கேட்டேன் 

ஈர்க்கும் புவிஈர்ப்பு விசையில் கூட
உன் காதல் ஈர்ப்பை கண்களில் கண்டேன் 

இரவுகள் கூட பகலாய் மாற 
இன்ப வரவுகள் எல்லாம் 
செலவுகளைத் தேட ....

உயிரே உறவே உன்னில் 
நன் நுழைந்ததால் 
வானம் வசபடுகிறது 
வாழ்க்கையைத் தேடி ...

நீயும் நானாகி பார் 
உன் நிழல் கூட வசப்படும் 
நீல வானத்தில் நம் 
காதல் நினைவுகள் நீந்துவதால் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145