மரம் பேசுகிறது ...!


நீ அழுதால் நான்
இசைக்கிறேன் கற்றாய்

தென்றலாய் என்
நாணத்தில் சிவந்த மேகங்கள்
உன் தாகத்தை தணிக்க
மழையாய் பொழிந்ததால்
மனிதா நீ உயிர் வாழ்கிறாய்

ஆனால் உன் நிழல் கண்டு
வாழும் வாழ்வில் என் நிழல்
வந்து போவதால் பூமி
நிலைகண்டு வாழ்கிறது

இந்த நிலை கண்டும் என்னை
விலைகொண்டு வெட்டுவதால்
பூமி நிலை தடுமாறும் நேரம்
நீ நிலையில்லாமல் போய்விடுவாய்

குறை கொண்டு கூறவில்லை
உன் நிறை கண்டு வாழட இந்த
நிலையுள்ள பூமியில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145