தமிழ் காதல் மண்ணில் விழும்...!




கண்டு கொய்து கனவு பழுத்து 
தூய காதல் மார்பில் விழும் 
தொண்டைச் சுரப்பை நாளும் தொழும்
தேகம் மட்டும் என் பேர் எழும் 

வண்டு கோர்க்கும் தேன் பழம்போல் 
வயதின் காலம் பெருகி விழும் 
என்றும் மனையை கண்டு தொழும் 
இதயம் மட்டும் உனக்காய் எழும் 

கழித்தவர் நாவில் பலவென எழும் 
காதில் கடித்து கண்ணீர் விழும் 
மண்டி இறைவனை மணக்கத் தொழும் 
மறுஜென்மம் வேண்டாமென வரம் பழும்

விதியேனும் பென்சிலின் அழித்து எழும் 
விடையாய் மார்பில் நீ விழாவிடில்
கூறிய முனையின் துன்பம் எழும் 
கொண்டிடுவார் என்னுயிர் மண்ணில் விழும் 




6 comments:

  1. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    சித்துண்ணி கதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
    பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

    ReplyDelete
  2. supper sister i like it

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145