சென்ரியுவாய்த் திருக்குறள்-221-225

குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


ஈகையின் இலக்கணம் 
இல்லாதவரை
இருப்பவராக்குவது 

குறள் 222:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 

இல்லெனினும் ஈதலே நன்று.

நல்வழி பொருளைவிட 
வாழ் நாள் வரை 
வாரி வழங்குவதே சிறப்பு 

குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே யுள.


ஏழ்மையிலும் 
ஈகை செய்தால்  
இதயம் நூறாகும் 

குறள் 224:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
இன்முகங் காணும் அளவு.

இன்முகத்துடன் 
ஈகை செய்வதே 
வாழ்வில் இன்பம் 

குறள் 225:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.

தவ வலிமையை 
வென்றது 
பிறர் பசி தீர்ப்பது 



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145