குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
நான்கு மனையை தேடினால்
நான்கு பாவங்கள்
துணைவரும்
குறள் 147:
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
மனைவிக்கு துரோகம்
என்னாதவன்
பெண்மையின் அண்ணன்
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறப் மனைவியை
தாய் போல் போற்றுபவன்
கடவுளுக்கு சமம்
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
வேற்று பெண்ணை தீண்டாதவன்
கடல் சூழ்ந்த உலகத்தின்
கலங்கரை விளக்கு
குறள் 150:
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
ஆயிரம் பாவங்களையும்
புண்ணியமாக்கும்
ஒரே மனைவியின் ஆசை
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...