| அரை வட்டம் |
| முழுமதிப்பெண் கிடைத்தது |
| பரிட்சை பேப்பரில் |
| தரிசு நிலத்தைப் பார்த்து |
| ஓயாமல் கத்துகிறது |
| கறவை மாடு |
| துரோகியின் மரணம் |
| புண்ணியத்தை தேடிக் கொண்டது |
| சவப்பெட்டி |
| நடந்து முடிந்த இரவு |
| சுத்தம் செய்கிறது |
| காலைப் பனித்துளி |
| தலைமுழுகிய பின்பும் |
| துவட்டிவிட்டுச் செல்கிறது |
| சில நீர்த்துளிகள் |
| அகலப் பாதை |
| குறுக்குவழியில் சென்றது |
| மேச்சல் ஆடு |
| இந்தியாவின் முதுகெலும்பு |
| செயலிழந்து கொண்டிருக்கிறது |
| ஜந்தர் மந்தர் |
| கோடை வெயில் |
| குளிர்ச்சியாகவே இருக்கிறது |
| கோயில் சிலைகள் |
ஜூன் 2017 தமிழ்நெஞ்சம் மாத இதழில் எனது ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
நீரால் உடல் தூய்மையாகும் - உன் நினைவால் நம் காதல் தூய்மையாக்க கடல் தாண்டி வந்துவிடு என் கதிரவனே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...