ஜல்லிக்கட்டு 

செத்து விட்டார் CM 
கொத்து கொத்தாய் சொத்து சேர்க்க 
கட்டு காட்டாய் பணமாற்றம் 
காணாமல் போனது நீதி மாற்றம்

சுட்டு வைத்த சொத்தெல்லாம் 
சுடுகாடு வரை செல்லாது என தெரிந்தும் 
தெரு கூத்தாய் நாறும் சட்ட சபை

அட்டை போல ஒட்டிக்கொண்ட 
ஆட்சி காலம் வெள்ளை சட்டை போட்ட
நரிகளிடம் மாட்டிக் கொண்டதே

திட்டம் போட்டு சட்டம் படிக்கும் 
திருடர்கள் எல்லாம் வட்டம் போட்டு 
வாழ்வதை நிறுத்த

ஒட்டுப் போட்ட மக்கள் கூட்டமே 
ஒட்டுமொத்த வாக்குகளையும் 
கட்டி காத்த ஜல்லிக்கட்டு 
காளையர்களுக்கு சமர்ப்பியுங்கள் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145