|  | 
| 
சித்து
  எப்போதும் தனது தாத்தாவுடன் மாலை வேளையில் வாக்கிங் போவது வழக்கம் அப்போது அந்த
  வழியாக வந்த விளம்பர வாகனத்தில் இருந்து ஒருவர் ஒரு நோட்டிசை கொடுத்தார் அதில்
  உணவை வீணாக்காதீர்கள் என்ற எழுதியிருந்தது . | 
| 
படித்து
  விட்டு தாத்தாவிடம் விவரத்தை கூறினான் கூறியதை கேட்காமல் எதோ சிந்தனையில் இருந்த
  தாத்தாவின் கண்களை உற்றுப் பார்த்தான்  | 
| 
தாத்தாவோ
  அருகில் இருக்கும் குப்பை தொட்டியை பார்த்தார் அங்கு ஒரு காகம் பசியோடு குப்பை
  தொட்டியில் இருக்கும் வடையைக் கொத்தியதும் சந்தோசமாகப் பறந்து சொன்றது. பின்
  சிறிது நேரம் கழித்து காக்கை அந்த வடையை அதே குப்பை தொட்டியில் போட்டுவிட்டு
  சென்றதைக் கண்டு வருத்தத்துடன் தாத்தா சொன்னார்  | 
| 
என்றோ
  ... | 
| 
வானுயர்ந்த
  அனுமனுக்கு  | 
| 
வடையால்
  அலங்காரம்  | 
| 
வந்த
  விழிகள் எல்லாம்  | 
| 
வளைத்து
  வளைத்து எடுத்த செல்பியில் | 
| 
வடை
  ஊசவில்லை  | 
| 
வயிற்றுப்
  பசிக்கு  | 
| 
வட்டமிட்ட
  காக்கையின்  | 
| 
வாயில்
  ஊசியதோ ? | 
| 
என்றதும்
  அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி தாத்தாவை புகழ்ந்தார்கள் அத்துடன்
  நாங்கள் யாரும் இனிமேல் உணவை வீண் அடிக்க மாட்டோம் என்று சபதம்
  எடுத்தார்கள்  | 
| 
மறு
  நாள் சித்து பள்ளிக்கு சென்றான் வழக்கம்போல் பாடம் நடந்தது மதிய உணவுக்கு நேரம்
  வந்ததும் தனது உணவை எடுத்து சென்று ஓடுகையில் கை தவறி கிழே சிந்தியது சிந்திய
  உணவை குப்பையில் போடும் படி ஆசிரியர் கூறினார் ஆனால் குப்பையில்
  கொட்டிய சோறு அழுகி தொற்றுக் கிருமிகள் காற்றுடன் கலந்து துருனாற்றம் வீசும்
  என்பதை பேச முடியாத காக்கை அந்த வடையை கொண்டு சென்ற இடத்தில் போட்டால் அங்கேயும்
  நோய் கிருமி பரவிவிடுமே என நினைத்து எடுத்த இடத்திலே கொண்டு வந்து போட்டதை
  நினைவு கூர்ந்த சித்து தன் பசி அடங்கவில்லை என்றாலும் இந்த பருக்கையில் எத்தனை
  காகங்களின் பசி அடங்கும் என்று பள்ளியின் மொட்டை மாடியில் சென்று
  தூவிவிட்டு வந்தான் இதை கண்ட அனைவரும் அவனை பாராட்டி தாங்களும் உணவை வீணாக்க
  மாட்டோம் என்று சபதம் எடுத்தனர் . | 
| 
குழந்தைகளே
  இதன் மூலம் தாங்கள் கற்றுக்கு கொள்வது என்னவென்றால் "உடலைப் பேணுவதற்கு
  உணவு தேவை அப்படிப்பட்ட உணவை வீணாக்குவது உலகையே அழிப்பதற்கு சமமாகும் " | 
சிறு கதை : உணவை வீணாக்காதே !
Labels:
சிறுகதை
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
- 
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
 
 
சிறு கதையினில் அடங்கியுள்ளதோ / அடக்கியுள்ளதோ மிகப்பெரும் உண்மை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் ஐயா
Deleteவணக்கம்
ReplyDeleteஅற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்திற்கு என் அன்பு நன்றிகள் அண்ணா
Delete