மழலை வண்ணங்கள் ...!


எண்ணச் சிதறல்கள் போடும் அழகிய
வண்ணக் கோலமாய் ஜாலம் செய்யும்
உயிரோவியமே நீ

ஓரு துளி உமிழ் நீரில் கலந்து
ஒரு உயிர் துளி உணவாய்
கண்ணில் நுழைந்து

மண்ணில் மறையும் மாய ஒளியில்
வழியெங்கும் வாசம் வீசும் வாடா
மலரில் தேடா சுவையானவளே

தேடுகிறேன் என் தேகத்தில் உன்
தேகம் தாகம் தீர்க்கும்
காவிய பூக்களாய் இல்லாமல்

நல் ஓவியம் படைப்போம் உயிரே
நம் உருவத்தில் சிரிக்கும் அழகிய
மழலை வண்ணங்களில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145