இந்தக் காதல் எது வரை?


சின்னஞ் சிறு இதயத்தில் - நீ
சிரித்து வந்த காதலனே

வண்ண வண்ணக் கனவிலே - நீ
வாழ்ந்து வந்த கணவனே

உன்னை பொத்திவைத்த மனதிலே - நீ
என்னை போர்த்த வந்த மன்னனே

கட்டி வைத்த குடும்பத்தில் - நாம்
காலமெல்லாம் சேர்ந்து வாழவே

அழகு பிள்ளை பெற்றோமே - நாம்
அன்னை தந்தையாக மாறுவோமே

பேரன் பேத்தி கண்டுமே - காதல்
பேரும் புகழும் கிட்டவே

வயது வந்த போதிலும் - நல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ்கிறோமே

நூறு வயது தாண்டியும் - நம்
நூறு தலைமுறை செழிக்கவே

காட்சி தந்து கடவுளாய் - உன்
கண்களிலே காண்கிறேன்

ஆசி தந்த மச்சானே - என்னை
ஆளவந்த அத்தானே நல் வாழ்வரசி
போலவே நான் வாழ்ந்து வீழவேண்டும்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145