முத்தமிழே !

Image may contain: 1 person, sunglasses and closeup

முத்தமிழே 
உன் எழுது கோல்
இறக்கமின்றி கிடக்கிறது
எழுந்து வா

காவேரியும் 
கடலில் கலந்து விட்டது
கல்லணையும் 
நிறம்பி வழிந்து விட்டது
கடவுளின் 
இதயம் மட்டும் இறங்கவில்லையோ
எழுந்து வா தலைவா

தமிழரின் உரிமைக்கு
குரல் கொடுத்த தமிழே 
இன்று
தலைசாய்ந்து கிடப்பதைக் கண்டு 
கண்ணீர் சிந்துகிறதோ
காவேரியின் முன்

இதுவரை கரை சேர்த்த 
கட்டுமரம் களங்கரை விளக்காக 
ஒளி வீச எழுந்து வா

உனக்கும் ஓர் இடம் உண்டு 
அங்கே உலகம் பேசும் 
வரலாறு உண்டெனத் தனித்துவம் 
படைத்தத் தமிழே இன்று 
தமிழகமே உன் இறப்பை 
நோக்கி தவிக்கிறது இங்கு

கதறி அழுக்கும் இதயத்தின் 
ஒரம் கொஞ்சம் கருணை இருந்தால்
விடை கொடுக்கும் முன்
விழித்தெழு என் வெண் மேகமே
விடியலை கொஞ்சம் நிறுத்திவிடு 

அலை கடலென திரண்டு ஓடும்
மனிதர்கள் முன் உன்
ஆன்மாவை எவ்வாறு அறிவது
என்று புலம்புகிறோம் 

விழித்திடு தமிழே ! விழித்திடு தமிழே !
விழித்திடு தமிழே ! விழித்திடு தமிழே !

ஆக்கம் - ஹைக்கூ மின்னிதழ் - சூலை - 2018

இலையின் அரங்கேற்றம்
தழைகீழாக
புழுவின் நடனம்

கோயில் திருவிழா
ஊதி ஊதியே பெருத்தது
பொங்கல்பானை

யாரோ ஒருவரின் வேண்டுதல்
நிறைவேறிய மகிழ்வில்
ஆலையமணி

பிரகாசமாய் எரியும் மெழுகுவர்த்தி
ஊதி அணைத்தபடி
பிறந்த நாள் கொண்டாட்டம்

வாசலில் பிச்சைக்காரி
தாண்டிச் செல்கிறார்கள்
சாமிக்கு பட்டுச்சாத்த

mhishavideo - 145