தூத்துக்குடி சோகம்



சிறகறுந்த உயிர்கள் மத்தியில்
வேடனின் துப்பாக்கி சத்தம்
சிங்கத்தையே குறிபார்த்த
தோட்டாக்கள்
குருதியில் நனைந்த
உப்புக் காற்று
அய்யோ....
கொள்ளை ஆட்சிக்கு கொடிபிடித்தப் 
பிணம் திண்ணி கழுகுகளே
பணத்திற்கு விலை போனாயோ
அந்த 
உதிரத்தின் உழைப்பில் தான்
உன் சரிரம் வளர்ந்ததை
சற்றும் மறந்தாயோ
இதற்கு
மரணம் மட்டுமே தீர்வல்ல
மனிதாவி மானம் 
உண்டென்பதை மறைத்து
உப்பிட்ட மண்ணிற்கு
தப்பிட்டப் பெருமை எம்
தழிழகத்தில் உன்டென
உரைக்க செய்தாயோ
பதி மூன்று ஓட்டைக் கொன்று 
பதவியேறத் துடிக்கும் சொரி நாய்களே
இது மனுநீதிச் சோழன் வாழ்ந்த
மண்ணென்பதை நினைத்துப்பார் 
நீதி மறுபடியும் வெல்லும்

4 comments:

  1. 13 தானா என்பது இறைவனுக்கே வெளிச்சம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா ஆனால் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாயிற்றே

      Delete
  2. தூத்துக்குடி உயிரிழப்பை
    தாங்கமுடியாத துயரம்
    தொடரும்

    ReplyDelete
    Replies
    1. பொது உணர்வுடன் உலகெங்கும் வெடித்த புரட்சி அல்லவா ? கண்ணீரோடு சேர்ந்த வெற்றி

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145