கவிச்சூரியன் - நவம்பர் -2017

சாயும் காலம் 
தள்ளாடியபடியே 
கிணற்றில் விழுந்தது நிலா 
பட்டம் விட்டவன் 
கையில் அறுந்துகிடக்கிறது 
வானம்
அனைத்து சாதியினரும் 
அகம் மகிழ்கின்றனர் 
அன்னதானத்தில் 
இலை உதிர்ந்த 
கிளையில் பூத்திருக்கிறது 
சிட்டுக்குருவி 
மரத்திற்கு மரம் 
தாவிக்கொண்டிருக்குறது 
பூமியில் நிழல் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145