1000 கவிஞர்கள் கவிதைகள் உலகளாவிய பெருநூல் 21-10-2017





கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்

மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி

குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்

நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி

கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்

மின்மினிக் கனவுகள்


மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்"
தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் .


ஆக்கம் - மின்னிதழ் (புரட்டாதி - ஐப்பசி -2017)

எந்த முனீவரின் சாபமோ 
நின்றபடியே ...
கோயில் சிலைகள் !
உளியின் சத்தம் 
காய்த்துப் போனது 
கடவுளின் மனம் !

பழங்களால் வந்த நோய்


மோசமான ரசாயனங்கள் கலந்துள்ளது!!  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகளில் எல்லாம் எச்சரிக்கை!!

வறுமையில் வாடிய குடும்பம் ஒரு நாளைக்கு உணவு உண்பதே கடினம் அப்படி இருக்கையில் தனது மகளை எப்படியாவது ரத்த சோகையில் இருந்து மீட்டெடுக்கவேண்டுமென்று தினமும் மாலை கடை வீதிக்கு சென்று அங்கு கூறு கட்டிய பழங்களை குறைந்த விலையில் வாங்கி வந்து கொடுப்பாள் மகளும் அதை விரும்பி சாப்பிடுவாள் 
ஒருநாள் திடிரென்று தாளாத வயிற்று வலி வந்தது துடிதுடித்தாள் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றால் அங்கு மருத்துவர் அக்குழந்தையை பரிசோதனை செய்தார் அவராலே நம்ப முடியவில்லை அக்குழந்தைக்கு சம்மந்தமே இல்லாமல் பெரிய பெரிய நோயிகள் 
அம்மாவை அழைத்தார் மருத்துவர் என்ன இது உங்க குழந்தையை நன்றாக கவனிக்காமல் விட்டுவிட்டேர்கள் இப்போது அவள் மரண தருவாயில் இருக்கிறாள் எப்படி, நான் கூறும் போது வெறும் ரத்த சோகை தானே இருந்தது இது எப்படி சாத்தியம் வேறு எங்காவது ரத்தம் ஏத்தி இருக்கீங்களா 
அவர் இல்லை டாக்டர் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் தான் கூறு கட்டிய பழங்களை வாங்கி கொடுத்தேன் 
ஐயோ அது தான் நீங்கள் செய்த தவறு 
இல்லை டாக்டர் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தான் கொடுத்தேன் 
அட அம்மா இப்படி இருக்கீங்களே இப்ப உள்ள பழங்கள் எல்லாம் கெமிக்கல் மூலம் விறபனைக்கு வருகிறது அதன் தாக்கமே ஒரு வாரம் தான் ஒரு வாரம் முடிந்ததும் குப்பையில் போடவேண்டிய பழங்களை இந்த மாதிரி கூறு கட்டி விற்பனை செய்கிறான் இதில் எத்தனை பேர் கைகள் தொட்டு புழங்கியிருக்கு நல்லவர்களும் வருவார்கள் நோய் உள்ளவர்களும் வருவார்கள் இல்லை அங்கு வேலை செய்பவர்களுக்கு எதாவது நோயிகள் இருந்திருக்கலாம் 
இரண்டாவது ரோட்டு கைடை என்றால் புகை ஈ கொசு இப்படி ஏகப்பட்ட கிருமிகள் நிறைத்திருக்கும் இந்த பழங்களை உண்டதால் தான் உங்கள் மக்களுக்கு இவ்வாறான நோயிகள் வந்திருக்கிறது தயவு செய்து பணம் குறைவு என்று எண்ணி பல நோயிகளுக்கு ஆளாக்குகிறார்கள் இன்றைய மக்கள் 
இது உங்களுக்கு மட்டும் அல்லா எல்லோருக்குமே ஒரு நல்ல பாடம் (http://tamil.times.lk/news/2009)

mhishavideo - 145