கிளையை முறித்தபின் |
பூக்கத் தொடங்கியது |
செம்பருத்திப்பூ ! |
தேநீர் இலை பறித்துப் போட |
அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகிறது |
சாரமற்ற வாழ்வு ! |
ஆயிரம் காலத்துப் பயிர் |
அறுவடைக்காகக் காத்திருக்கிறது |
கோர்ட் வாசலில் ! |
கோவில் வாசலில் நின்று |
வணங்காமல் இருக்கும் |
காலணிகள் ! |
கோவில் சுவற்றில் |
அசுத்தம் செய்யும் |
தெரு நாய்கள் ! |
கொட்டித் தீர்க்கும் மழை |
வயலில் இறங்கி |
கப்பல்விடுகிறான் பேரன் ! |
மாமியார் மருமகள் சண்டை |
பதவி உயர்வு பெறுகிறார் |
வீட்டு வேலைக்காரி ! |
வளைந்து நெளிந்த புருவம் |
நேராகச் செல்கிறது |
பார்வைகள் ! |
முத்துக்கமலம் இணைய இதழில் எனது ஹைக்கூக்கள் - ஜூலை 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
வாழ்த்துகள்.....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete