கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்

மழை வெள்ளம்
மூழ்கியது
மனை வியாபாரம்
எந்த நாகம் தீண்டியதோ
நுரை தள்ளியது
கடலலைகள்
பல கோடி நட்சத்திரங்கள் 
இருட்டாகவே இருக்கிறது 
விண்வெளி
காம்பறுந்த மலர்கள்
ஒவ்வொன்றாக கோர்க்கிறாள்
பக்கத்துவீட்டு சிறுமி 
அப்பாவி பொண்ணுக்கு
ஆலகால விசமானது
நாக தோசம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 33

மருதாணி வைத்த 
கையில் சிவந்திருக்கு 
வரதட்சணையாக 
தாய் வீட்டு சீதனம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 32

காற்று வரும் போதெல்லாம்
நீயும் வருவதால்
வேறு வழியில்லாமல்
மூச்சுவிடுகிறேன்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 31

நான் வரைந்த 
ஓவியத்திற்கு 
உயிரூட்டிச் சொல்கிறது 
உன் ஒற்றை புன்னகை

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - கார்த்திகை 2017

தெரு மூலையில்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம் 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 30

பதுமையில்லா
கனவு வாழ்கை
முதுமையில்
முடிந்தது

தன்முனைக் கவிதைகள் நானிலு - 29

உனக்கான மலரை
தேடித் தேடியே
உதிா்ந்துவிட்டேன்
கல்லறையில்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 28

கடைசி பெஞ்சில் 
கிறுக்கப்பட்டுள்ளது 
முதல் காதலின்
கடைசியெழுத்து

தன்முனைக் கவிதைகள் நானிலு - 27

திசைகள் எட்டிலும் 
தேடிபாா்கிறேன்
அவளே வந்தாள்
ஒன்பதாவது திசையாக

தன்முனைக் கவிதைகள் நானிலு - 26

ரயில் என் மீது ஏறினாலும் 
நான் ரயிலில் ஏறினாலும் 
பயணம் என்னவோ 
தனிமையில் தான்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 25

புரியாமலே 
பேசிக்கொள்கிறோம்
அதற்குள் முடிந்து போனது
இருப்புத் தொகை

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி 
என்ன விலை 
வாங்கிக்கொள்கிறேன் 
அந்த ஏழு நாட்களுக்கு பின்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 23

ஏழு மலை ஏழு கடல் 
தாண்டி வாழ்ந்தாலும் 
தீர்வதே இல்லை 
காதல் பசி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 22

உளிகள் சத்தமிட்டு போதும் 
விழிகள் திறக்காது 
சிலையாகவே நிற்கிறாள் 
கலியுக கண்ணகி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 21

ஊஞ்சல் ஆடிய 
பாதங்கள்
ஒய்வெடுக்கிறது
மரத்தடி நிழலில்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 20

நீ மனதால் அடித்த அடியே 
மரணம் வரை வலிக்கும்
விரலால் அடித்து விடாதே
விடை தெரியாமல் போய்விடுவேன்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 19

முத்தமிடாத இதழ்
எதுவென்றேன்
உன் இதழ் என்றதும்
உதிர்ந்தது பொய் 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 18

நிலவு வந்ததும்
ஒடி ஒளிந்து கொள்கிறது
அவளின்
அழகு முகம்

தமிழ்நெஞ்சம் டிசம்பர் - 2017

மருத்துவ கனவு 
நீட்டாக முடிந்தது 
பிரேதபரிசோதனை 
தீ பந்தம் 
கொழுந்து விட்டு எறிகிறது 
தீண்டாமை 
ரயில் பயணம் 
மோதிக்கொள்கிறது 
பழைய இருக்கை 
இறுதி மூச்சை 
விட்டுக்கொண்டிருக்கிறது 
தெரு குழாய்கள் 
குறி பார்த்து 
உதைக்கிறது 
கொம்பு தேனீ 
தலை முழுகிய பின்னும் 
மணக்கிறது 
நேற்று வைத்த முல்லை 
சத்தமில்லாமல் 
திறக்கிறது 
பூ விழிகள் 
நிமிர்ந்து நின்றால் 
சாம்பல் ஆவீர் உணர்த்தியது 
ஊது பத்தி 
தீப ஒளி திருநாள் 
மங்கலாக தெரிகிறது 
அப்பாவின் கண்கள் 
நட்சத்திரங்களாக 
ஜொலிக்கிறது 
பாட்டி சுட்ட வடை 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 17

கடல் அலை
காலை அறிக்கும்
காதல் அலை
கண்ணை கரிக்கும்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 16

சலவை கல்
அழுக்கு படிந்திருக்கும்
கிராமத்து 
காதல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 15

உன்னை பார்த்ததும்
இளைப்பார துடிக்கிறது
இதயத்தின்
சாரல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 14

பழம் நழுவி
பாலில் விழுந்ததும்
புளித்தது
காதல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 13

உயிரைக் கையில் 
பிடித்து வைத்துள்ளேன் 
இப்படிக்கு 
சிறகிழந்த பட்டாம்பூச்சி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 12

நாம் 
பிாிந்து சென்ற இடத்தில் 
ஒன்று கூடியது உதிர்ந்த
சருகுகள்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 11

தாழ்ந்த இடத்தில் இருந்து
உயர்ந்த இடத்திற்கு செல்கிறேன்
தலை கீழாகதான் 
தெரிகிறது வானம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 10

நீ 
தொடும் போதெல்லாம் 
நான் காற்றடித்த 
மேகமாய் கலைகிறேன்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 9

மரணத்தை விட 
கொடுமையானது 
மனதில் உன்னை 
உயிரோடு 
பூட்டி வைப்பது

தன்முனைக் கவிதைகள் நானிலு - 8

உன் உதட்டு 
சாயத்தில் ஒளிந்திருக்கு
எனக்கான
பாதரசம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 7

எத்தனை முறை 
தூக்கி எறிந்தாலும் 
அளவு குறைவதே இல்லை 
உண்மை காதலுக்கு

தன்முனைக் கவிதைகள் நானிலு - 6

உன்னை 
நேசித்த பிறகு தான் 
தெரிந்தது என்னை நேசித்த 
இதயங்களின் வலி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 5

யார் ஒட்டுக்கேட்டாலும் 
நிறுத்தப் போவதில்லை 
கதை பேசும் 
நம் கைபேசி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 4

நீ 
துரத்திவிட்ட 
நாட்களையெல்லாம் 
சுமந்து செல்கிறேன் 
நான்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 3

நான் வைத்த மல்லிகை செடியில் 
ரோஜாவின் வாசம் 
பறிக்க நினைத்தேன் 
மரித்து உதிர்ந்தது சருகாய்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 2

துளியது விஷமது 
தெரிந்தால் சொல் 
உமிழ்ந்து விடுகிறேன் 
உன் உயிரில்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 1

எந்த கரமாக இருந்தாலும் 
பற்றிக்கொள்கிறேன் 
எழுதியவன் துணையிருந்தால்
வாழ்ந்திடலாம் விதியை வென்று

கவிச்சூரியன் - நவம்பர் -2017

சாயும் காலம் 
தள்ளாடியபடியே 
கிணற்றில் விழுந்தது நிலா 
பட்டம் விட்டவன் 
கையில் அறுந்துகிடக்கிறது 
வானம்
அனைத்து சாதியினரும் 
அகம் மகிழ்கின்றனர் 
அன்னதானத்தில் 
இலை உதிர்ந்த 
கிளையில் பூத்திருக்கிறது 
சிட்டுக்குருவி 
மரத்திற்கு மரம் 
தாவிக்கொண்டிருக்குறது 
பூமியில் நிழல் 

ஹைக்கூக்கள்

ஒதுக்குப்புறமான வயல் 
கடிக்கிறது 
காலனிவீடு 
அரசமர நிழல் 
உராய்சிக் கொண்டிருக்கிறது 
புளியமரத்து பேய் 
அழுக்கு துணிகள் 
சுதந்திரமாக பறக்கிறது 
வண்ணாந்துறையில் 

ஹைக்கூக்கள்

நீட் தேர்விற்காக
ஒத்து ஊதுகிறார்
படிப்பறிவில்லா தலைவர்
கலைகளுக்கு நடுவே
பூத்துக் குலுங்குகிறது
தாத்தா செடி
பூனை குறுக்கே வந்ததும்
புலியாக மாறினார்
மாமியார்
ஒழுகும் குடிசையில்
ஒய்யாரமாய் ஒலிக்கிறது
பறை சத்தம்
உருண்டோடும் உலகம்
வறண்டோடுகிறது
நதிகள்
புயல் வந்ததும்
கரையை கடக்கிறது
தொலைக்காட்சி செய்தி
விளக்கு பூஜை
அணைய தொடங்கியது
மலரின் வாசம்

ஹைக்கூக்கள்

சுவர் இருக்கிறது 
சித்திரம் வரைய 
குழந்தை இல்லை
காலனி வீடுகள் 
அழகாகத் தெரிகிறது 
சிமிண்ட் சாலை
விரலில் மருதாணி 
வேலை செய்யவில்லை 
பணியாளர் பஞ்ச் கடிகாரம்
விரைவு தபால் 
தாமதமாக வந்தது 
திருமண வாழ்த்து
கிளை இருக்கிறது 
இலையை தேடும் 
மின்சார குருவி
புத்தக மூட்டைக்குள் 
மயில் இறகாய் 
அம்மாவின் கனவு 
உளியின் அழுகை 
நீர்த்துப்போனது 
சிலையாக 
எப்படி துலக்கினாலும் 
நாறுகிறது 
வாய்க்கால்
குக்கர் சத்தத்தில் 
விழிக்கிறது 
பட்டணத்து நிலா 
கவலைப்படாத அரசு 
காலாவதியாகிக் கொண்டிருக்கிறது  
டெங்கு மலேரியா 

ஹைக்கூக்கள்

மழையின் அடர்த்தி 
நிரம்பவில்லை 
கடலின் பசி
அரசனையும் 
ஆண்டியாக்கியது 
அந்தி நேர தென்றல் காற்று"
வெளியூர் மாப்பிள்ளை 
அண்ணாந்து மேலே பார்த்தால்
வானூர்தி
புது செருப்பு 
கடிக்கிறது 
தையல்கூலி 
தாத்தாவின் பிரிவு 
வனவாசத்தில் 
சீதாப்பாட்டி 
சடங்கு சம்பிரதாயம் மூலம் 
பிரிந்துகிடக்கிறது 
கலப்பு திருமணம்
மழை இல்லாமல் 
துருப்பிடித்தது 
குடைகம்பி
அழுதுவிட்டேன் 
சிரிக்கிறது 
காற்றில் உதிர்ந்த பூ
நதி இருந்த இடத்தில் 
துள்ளி குதித்து ஓடுகிறது ....
மேச்சல் ஆடு
இரவை வாசிக்க வாசிக்க 
பகலாகி போகிறது 
மேகம் !

ஹைக்கூக்கள்

அடகு கடை 
கனமாக இருக்கிறது 
படிக்கல் 
நெகிழி அரிசி 
புழுக்களாக மாறும் 
மனிதர்கள் 
கரையில்லா சுவற்றில் 
ஏறி இறங்குகிறது 
வீட்டு மனைகள்
உடலில்லா நாற்றம்
குடலை பிடுங்கினது
கௌரவக் கொலை
புத்தக புழுக்கள் 
நெளிந்துகொண்டிருக்கிறது 
முகநூல் பக்கம்
பட்டமளிப்பு விழா
கை குழந்தையுடன்
முன்னாள் காதலி
வற்றிய நதியில் 
நிரம்பி வழிகிறது 
விவசாயின் கண்ணீர்
ஈறும் பேணும்
செழிப்பாக வளர்கிறது
அநாதை இல்லத்தில் 
மனதை கலைத்துவிட்டேன் 
லேசாக தெரிகிறது 
குப்பை தொட்டி
ஒட்டு வீடு 
முந்திக்கொண்டது 
கட்டிடங்கள்

கொலுசு - நவம்பர் - 2017

சுவர்களின் மீது 
ஏறி இறங்குகிறது 
இரயில் பூச்சி
அணிலைக் கண்டதும் 
இலைக்குள் மறைத்தது 
கொய்யா பழம்
மரத்திற்கு மரம் 
தாவிக்கொண்டிருக்கிறது 
நிழல் 

ஹைக்கூக்கள்

காக்கை அமர்ந்ததும்
திஷ்டி கழிந்தது
கோயில் கலசம்
ஊதுபத்தி தொழில்
புகைய தொடங்கியது
வாங்கிக் கடன்
முறை வாசல் சண்டை
முடிவுக்கு வந்தது...
சிமெண்ட் பூசியதும்
உழைக்கும் கரங்கள்
தேய்ந்து கொண்டே இருக்கும்
ஆயுள் ரேகை
கால் நடை பராமரிப்பு 
சோடை போனது 
அரசாங்க சலுகை
மரம் விழுந்த இடத்தில்
வேரைத் தோண்டும்
காக்கை கூட்டம்
பரதேசியாக அடித்து விரட்டியவர்கள்
பாவ மன்னிப்பு கிடைத்தது
முதியோர் இல்லத்தில்
காற்றை நிரப்பிவிட்டேன்
பறக்க மறுக்கிறது
மனசு
தவளையின் ஆரவாரம்  
உறங்க முடியவில்லை  
அழுத குழந்தையின் நினைவுகள்
குடிசை பகுதி
எரிந்து சாம்பலாகிறது
மனித நேயம்

ஹைக்கூக்கள்

ஒரே கருவறையில் 
மலர்ந்த இரு வேறு 
கை ரேகைகள் 
நாற்காலி சண்டையில் 
தெரிகிறது 
கோடரியின் பகை !
வரப்புகள் நடுவே 
சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் 
பெருச்சாளிகள் 
உடைந்த கண்ணாடிக்கு 
நடுவே தெரிகிறது 
பல புதிய முகம் 
சிவப்பு கம்பள விரிப்பில் 
தூங்கிக் கொண்டு இருக்கிறது 
பல சாதனை விருதுகள்
உறைபனி காலம் 
பளபளப்பாக மின்னுகிறது 
வானவில் 
வயதானாலும் 
இளமையான காற்றை தருகிறது 
மரங்கள்
கன்று ஈன்ற வாழை மரம்
முணுமுணுத்தபடியே செல்கிறார்
மாமியார்
கழட்டி விடட செருப்பில் 
ஒட்டிக்கொண்டிருக்கிறது 
செருப்பு தைத்தவனின் வடு 
புன்னை மரத்தடியில் 
அழுதுகொண்டிருக்கிறது 
ஒரு பறவை 

ஹைக்கூக்கள்

பழுத்த இலையின் மேல் 
துள்ளிக்குதித்து விளையாடுகிறது 
விட்டில் பூச்சி
உழுத நிலத்தில் 
அடுக்கடுக்காய் தெரிகிறது 
கட்டிடங்கள்
எமதர்மனின் ஆயுள்
கூடிக்கொண்டே செல்கிறது 
மரணத்தின் வாயிலாக
நகரத்தை நோக்கி 
மெல்ல நகர்கிறது 
வன விலங்குகள் 
அழகின் பரிசத்தை 
ஒவ்வொன்றாக விளக்கியது 
எதிரே உள்ள கண்ணாடி 
புதுப் புதுப் மலர்கள் 
பூத்துக் குலுங்குகிறது 
முதியோர் இல்லத்தில் 
திருவிழா கூட்டம் 
கூடவே வருகிறது 
மதுக்கடை வாசம் 
அடகு கடையில் 
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது 
அம்மாவின் தாலி 
இரு தை மாற்றம் 
வழி பிறக்காத 
முதிர் கன்னி
நன்றி செய்தவரை 
ஒதுக்கி வைத்தது 
ஒட்டுண்ணிகள்

1000 கவிஞர்கள் கவிதைகள் உலகளாவிய பெருநூல் 21-10-2017





கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்

மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி

குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்

நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி

கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்

மின்மினிக் கனவுகள்


மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்"
தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் .


ஆக்கம் - மின்னிதழ் (புரட்டாதி - ஐப்பசி -2017)

எந்த முனீவரின் சாபமோ 
நின்றபடியே ...
கோயில் சிலைகள் !
உளியின் சத்தம் 
காய்த்துப் போனது 
கடவுளின் மனம் !

பழங்களால் வந்த நோய்


மோசமான ரசாயனங்கள் கலந்துள்ளது!!  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகளில் எல்லாம் எச்சரிக்கை!!

வறுமையில் வாடிய குடும்பம் ஒரு நாளைக்கு உணவு உண்பதே கடினம் அப்படி இருக்கையில் தனது மகளை எப்படியாவது ரத்த சோகையில் இருந்து மீட்டெடுக்கவேண்டுமென்று தினமும் மாலை கடை வீதிக்கு சென்று அங்கு கூறு கட்டிய பழங்களை குறைந்த விலையில் வாங்கி வந்து கொடுப்பாள் மகளும் அதை விரும்பி சாப்பிடுவாள் 
ஒருநாள் திடிரென்று தாளாத வயிற்று வலி வந்தது துடிதுடித்தாள் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றால் அங்கு மருத்துவர் அக்குழந்தையை பரிசோதனை செய்தார் அவராலே நம்ப முடியவில்லை அக்குழந்தைக்கு சம்மந்தமே இல்லாமல் பெரிய பெரிய நோயிகள் 
அம்மாவை அழைத்தார் மருத்துவர் என்ன இது உங்க குழந்தையை நன்றாக கவனிக்காமல் விட்டுவிட்டேர்கள் இப்போது அவள் மரண தருவாயில் இருக்கிறாள் எப்படி, நான் கூறும் போது வெறும் ரத்த சோகை தானே இருந்தது இது எப்படி சாத்தியம் வேறு எங்காவது ரத்தம் ஏத்தி இருக்கீங்களா 
அவர் இல்லை டாக்டர் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் தான் கூறு கட்டிய பழங்களை வாங்கி கொடுத்தேன் 
ஐயோ அது தான் நீங்கள் செய்த தவறு 
இல்லை டாக்டர் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தான் கொடுத்தேன் 
அட அம்மா இப்படி இருக்கீங்களே இப்ப உள்ள பழங்கள் எல்லாம் கெமிக்கல் மூலம் விறபனைக்கு வருகிறது அதன் தாக்கமே ஒரு வாரம் தான் ஒரு வாரம் முடிந்ததும் குப்பையில் போடவேண்டிய பழங்களை இந்த மாதிரி கூறு கட்டி விற்பனை செய்கிறான் இதில் எத்தனை பேர் கைகள் தொட்டு புழங்கியிருக்கு நல்லவர்களும் வருவார்கள் நோய் உள்ளவர்களும் வருவார்கள் இல்லை அங்கு வேலை செய்பவர்களுக்கு எதாவது நோயிகள் இருந்திருக்கலாம் 
இரண்டாவது ரோட்டு கைடை என்றால் புகை ஈ கொசு இப்படி ஏகப்பட்ட கிருமிகள் நிறைத்திருக்கும் இந்த பழங்களை உண்டதால் தான் உங்கள் மக்களுக்கு இவ்வாறான நோயிகள் வந்திருக்கிறது தயவு செய்து பணம் குறைவு என்று எண்ணி பல நோயிகளுக்கு ஆளாக்குகிறார்கள் இன்றைய மக்கள் 
இது உங்களுக்கு மட்டும் அல்லா எல்லோருக்குமே ஒரு நல்ல பாடம் (http://tamil.times.lk/news/2009)

கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்

புத்தனை போலவே 
தியானத்தில் இருக்கிறது 
நூலகத்தில் புத்தங்கள் 
ராப்பிச்சை 
ஒளிவீசுகிறது 
தட்டில் நிலா 
ஆடி பெருக்கு 
அடி பம்பிற்கு பூஜை போட்டாள் 
அம்மா 
சுடும் மணல் 
ஒத்தடம் கொடுக்கின்றன 
பனித்துளிகள் 
உயர்ந்த வானம் 
தரையிறங்கியதும் விஷமானது 
மண் வாசனை 

மின்மினிக்கனவுகள் - நூல் அறிமுகம்


வணக்கம் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியா செய்தி

இன்று தான் என்னுடையா ஹைக்கூ புத்தகம் "#மின்மினிக்கனவுகள் Print முடித்து கையில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

அப்புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய ஐயா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் , கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கும் அண்ணன் வதிலைபிரபா அவர்களுக்கு எனது முத்தர்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்

மேலும் என்னை வழிநடத்திய ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கும் மற்றும் தமிழ் தோட்டம் இரண்டிற்கும் நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் , மேலும் எனது ஹைக்கூவிற்கு இடம் கொடுத்த அனைத்து மாதாந்திர இதழ்களுக்கும் நன்றிகள்

எனது எழுத்தை நூலாக வடிவமைத்த நம் மொழி பதிப்பகத்திற்கும், சிறப்பான கவிதையை தேர்வு செய்து அச்சிட்ட அண்ணன் இளையபாரதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல

நண்பர்களே இப்புத்தகம் சிறுசிறுக சேமித்து தேனீக்கள் போல் வெளிவந்துள்ளது அதை பருகும் வாசகர்களாகிய நீங்கள் நிறை குறை இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டவும் அடுத்த இதழுக்கு அது உறுதுணையாக இருக்கும் என்பது என் கருத்து

மற்றவை விரைவில் சொல்கிறேன்
என்றும் உங்கள் ஆசியியுடன் 
உங்கள் ஹிஷாலீ


mhishavideo - 145