பிள்ளையார் பாடல் ...!



எங்க பிள்ளையாரு இவர் எங்க பிள்ளையாரு 
பிள்ளை வரம் வேண்டி வந்தவருக்கு தங்கும் பிள்ளையாரு 
தங்கப் பிள்ளையாரு இவர் தங்கப் பிள்ளையாரு 
தஞ்சமென்று வருவோருக்கும் அள்ளித்தரும் அன்பு பிள்ளையாரு 
வெள்ளிப் பிள்ளையாரு இவர் வெள்ளிப் பிள்ளையாரு 
வேதமற்ற பக்தருக்கும் ஞானம் போதிக்கும் யோகப் பிள்ளையாரு
செம்பு பிள்ளையாரு இவர் செம்பு பிள்ளையாரு
செஞ்ச வினையெல்லாம் போக்க வந்த செல்லப் பிள்ளையாரு 
மண்ணு பிள்ளையாரு இவர் களி மண்ணு பிள்ளையாரு 
கர்ம வினையெல்லாம் கரைய வைக்கும் தொந்தி பிள்ளையாரு 
வண்ணப் பிள்ளையாரு இவர் வண்ணப் பிள்ளையாரு 
எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் பிள்ளையாரு

முருகன் பாடல் ...!

Image result for murugan

எனக்கெனப் பிறந்தவனை மறைத்து விட்டாயோ 
மீண்டும் பிறந்தவனை எழுத மறந்துவிட்டாயோ முருகா 
உனக்கெனக் கொடுத்துவிட்டேன் என்னுயிரை 
இனியும் உனக்கு என்மேல் தயவில்லையோ முருகா 
தனக்கென ஓரிடத்தைப் பதித்துவிட்டாயே உலகினிலே 
எனக்கென ஒரு இடம் தருவதற்கு மனமில்லையோ முருகா 
மணக் கவலை தீர மலை ஏறிவந்தேன் 
என்னை இனியும் மன்னிக்க மனமில்லையோ முருகா 
உனக்கிரு துணைவியர் இருக்கையிலே 
எனக்கொரு துணையினைக் கொடுக்க வரமில்லையோ முருகா 
மனமுருகி அழுதுவிட்டேன் உன் திருவடியில் 
இனியும் என் குலம் செழிக்க வழி வரவில்லையோ முருகா 
பலவகை பழம் படைத்துப் பசியாற்றிவிட்டேன் 
பல தலைமுறை  பாவத்தை போக்கிட மனமில்லையோ முருகா 
அனுதினமும் உன்னை வெறுத்ததில்லை இருந்தும் 
திருமணக் கோலம் காண வரமளிப்பாயோ முருகா
(முதல் முறையாக பக்திப் பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன் 
எப்படி இருக்கு கூறுங்கள் நண்பர்களே )

காதல் சேரவில்லை ...!


உன் குரல் 
கேட்க வேண்டும்
என்ற 
ஏமாற்றமே என்னைக்
கொஞ்சம் கொஞ்சமாகக்
கூட்டியது
உயிரின் ஆசையை
இன்று ஆயுளோடு 
காத்திருக்கிறேன் ஆனால் 
காதல் சேரவில்லை ...!

ரணங்கள் ...!

உன் 
நினைவுகளை
வரிசை படுத்திப் பார்க்கும் 
போதெல்லாம்
இடைஇடையே 
வந்து போகிறது
துண்டுதரிச்சிப் பேசிய
ரணங்கள் ...!

பேயாக திரிகிறேன் ...!

காற்றை விடவும்
உயர்ந்த ஸ்தவனம்
உன் 
இதய துடிப்பு என்றவுடன் 
இதயத்தை அடைத்துவிட்டு
காற்றை திறந்து விட்டாள்
இப்போது
பேயாக திரிகிறேன்
காற்றில் ...!

மோட்சம் கேட்டு ...!

கர்வத்துடன் 
கடவுளின் காலடியில் 
விழுந்த பூக்கள் 
பக்தனின் கருணைப் பட்டு
பிரசாதமாய் எழுந்து நிற்கிறது 
மோட்சம் கேட்டு ...!

ஓர் கவிதை ...!



என்
கவலையை 
விலை கொடுத்து
வாங்கும் உரிமை 
உன் 
தனிமைக்கு மட்டுமே என்ற 
எண்ணத்தை மாற்றி 
இனிமையாக்கியது
ஓர் கவிதை ...!

விடை பெறுகிறேன் ...!



நினைவை விட்டு 
தூக்கியெறிந்த பின்னும்
கனவை வைத்து சுமக்கிறேன்
திறந்தது காதல் கதவு 
உள்ளே புகுந்ததும் 
புத்தி பேதலித்துத் தேடினேன்
எனை மறந்தது போதும் 
வேறொன்றைத் தேடிப் போனாயோ
என்ற ஆதங்கம்
என்னை 
ஆழமாகத் தேடு என்றதும் 
தவறை மறந்து தேடினேன்
எவளோ ஒருத்திக்கு 
லைக் போட்டதும்
கொதித்தெழுந்து சண்டையிட்டேன்
எனக்குள்ளே
சமாதானப்படுத்தியது 
இவன் வேறு மாதிரியோ என்று 
விழித்துக்கொண்டேன்
விதியை மிஞ்சிய உறவு 
இவ்வுலகில் 
வேறொன்றும் இல்லை என 
விடை பெறுகிறேன் 
காதலிலிருந்து ...!

மன்னிப்பு கோரி ...!



மன்னிப்பு கோரி 
மேல் முறையீடு 
செய்கிறது மனம்
ஆனால் ...
இரக்கமில்லாமல் 
வந்து வந்து குவிகிறது
பேசி விட்டு வெறுப்புகளும் 
நடந்து கொண்ட வேதனையும் ...!

ஒரு மடங்கு அதிகம் ...!



உன்னை
நினைக்கும் போதெல்லாம்
இதயம் கனக்கிறது
என்றேன்
எவ்வளவு என்றான் ?
உன் 
தாயின் அன்பை விட
ஒரு மடங்கு அதிகம் என்றேன் !

நா. முத்துக்குமார்



பணமும் வசதியும்
கொடுக்காத ஆயுளைத்  
தமிழ் கொடுத்துள்ளது
போய் வா கவிஞனே ....

மஞ்சள் காமாலை
அழித்தாலும் எங்கள்
நெஞ்சப் பாமாலையில்
குடியிருக்கும் ஆனந்த யாழையே

அனைவருக்கும் 
அடைக்கலம் உண்டு 
என அமைதியாய் உறங்கும் 
விழிகளுக்குத் தெரியும்

நாளைய 
நட்சத்திர கூட்டத்தில்
நீயும் ஒன்றென நம்பி
வழியனுப்புகிறோம்
கண்ணீர் மழையில் !!!!!

தமிழ்வாசல் ஆகஸ்ட் மாத இதழ் - 2016

தாமரை குளம் 
இலை மறை காயாய் 
பிம்பம் ...!
தொலை தூர பயணம்
விதைத்து செல்கிறது
பழைய நினைவுகள் ...!
தொட்டில் கட்டும் ஆசை
நிறைவு செய்தது
தாயின் பழைய புடவை ....!
சேமிப்பு பழக்கத்தை 
கற்றுக் கொடுத்தது 
பிச்சைப் பாத்திரம் ...!
எத்தனை முறை சுட்டாலும் 
ருசியை இழப்பதில்லை 
தோசைக்கல் ...!
மழை துளி பட்டதும் 
துள்ளி குதிக்கிறது 
பயமறியா இளங்கன்று ....!
குயவனின் கையில் 
அச்சில்லை .....
அளவில்லா பசி ...!
சூரியன் பார்வை பட்டு 
மெல்ல மெல்ல உருகியது 
மூடு பனி ...!
வற்றிய குளம் 
கரை ஒதுங்கிய விதை 
மரமானது ...!

கவிச்சூரியன் ஆகஸ்ட் மாத மின்னிதழ் - 2016


ஆலமரத்து நிழலில் 
அண்டி நிற்கிறது 
விழுதுகள் ...!
சிமிழிக்குள் குங்குமம்
அழித்துச் செல்கிறது
மதுக் குவளை ...!
கூண்டில் கிளி 
சிக்கித் தவிக்கிறது 
மூடநம்பிக்கை ...!
வயதான காலத்தில் 
சோறுப் போட்டது 
தென்னை மரங்கள் ...!

கண்களால் தொட்ட காதல்.


பல்லவி :
முகம் கண்ட நேரம் முதல் அகம் கண்டு மகிழ்ந்தேன் 
சுகம் கொண்ட காதல் மலரே வா 
கார்கால மேகம் போல் ஊர்கோலம் போவோமா என் 
காதல் கிளியே கவிதை குயிலே வா 
சரணம் :
விழி பட்ட மலரெல்லாம் இதழ் முத்தம் தேடுகிறேன் 
செவி கேட்ட பாடலெல்லாம் உயிர் மூட்டம் போடுகிறேன் 
தடம் பட்ட இடமெல்லாம் தாவி தாவி கூடுகிறேன் 
உடை மாற்றம் கண்டு என்னை உயிரோடு அணைப்பாயா - இல்லை  
உலராத மூங்கில் போல் வளைந்து நெளிந்து கொடுப்பாயா 
 (முகம் கண்ட)
விழி தொட்ட காதலெல்லாம் வழி மாறிப் போனதில்லை 
விரல் பட்ட தேகமெல்லாம் மறந்தோடிப் போவதில்லை 
நிழல் தொட்ட என் காதலியே நிஜமாகவே நினைக்கின்றேன் 
நிறம் தேடி மறுத்துவிடாதே என் மனம் தேடி மணந்துவிட
வாராயோ இல்லை வாராமல் போறாயோ காதலியே  (முகம் கண்ட)

(முதல் முறையாக தலைப்புக்கேற்ற பாடல் எழுதும் போட்டியில் கலந்து கொண்ட பாடல் எப்படி இருக்கு நண்பர்களே )

#சென்ரியு#

சிங்கத்தின் உதவியுடன்
கைமாறுகிறது
கருப்பு பணம் ...!

உன் தாரம்

எடை போட்டு 
காதல் செய்ய
நான் 
ஒன்றும் தராசல்ல
உன் தாரம்
படிக்கல்லாக்கி பார்
நம் இதயத்தை 
முட்களை தாண்டியும்
சமநிலையாகும் 
நம் வாழ்க்கை ...!

முற்று புள்ளி...!

விடிந்தால் நினைவு தொல்லை
அடைந்தால் கனவு தொல்லை
இடைபட்ட காலத்தில் 
இதயத் துடிப்பு தொல்லை
அய்யோ ....
என்ன செய்வேன்
ஓரு பக்கம்
அத்தனைக்கும் ஆசைப்படு 
என்கிறது ஓரு கூட்டம்
ஆசையே அழிவுக்கு காரணம்
என்கிறது இன்னொரு கூட்டம்
இரண்டில் இருந்து
தப்பிக்க 
இதய மாற்றம் புரிகிறேன்
இவளோடு சேர்த்து எத்தனையோ 
அத்தனைக்கும் 
முற்று புள்ளி வைக்க ...!

உன் மௌனம் ...!



சில நேரங்களில் 
உன் மௌனம் 
மரியாதையாக இருந்தாலும்
பல நேரங்களில் 
ஏங்கும் ஏக்கம் 
அவஸ்தையாக உள்ளது ...!

நேற்றைய விரிசல் ...!



வெகு நாள் சண்ட 
இன்று பேச மாட்டாயா
நாளை பேச மாட்டாயா 
என்று 
ஒவ்வொரு நொடியும்
ஏங்கும் என்னை
தெளிவு படுத்தியது
நேற்றைய விரிசல் ...!

mhishavideo - 145