சிறுகதை, !

ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் நீ வருங்க காலத்தில் என்னவாக போறாய் என்று வினாவினார் அதற்கு ஒவ்வொருவரும் நான் ஆசிரியராக போறேன் IAS படிக்கபோறேன் டாக்டராக போறேன் இஞ்சினியராகப் போறேன் வக்கீலாகப் போறேன் என்று சொல்லிக்கொண்டே வந்தனர் அப்போது ஒரு மாணவி மட்டும் நான் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரியாகப் போறேன் (TNPSC) என்றதும் ஆசிரியர் வியந்தார் அந்த பெண்ணை அழைத்து உனது வித்தியாசமான சிந்தனைக்கு கரணம் என்ன என்று கூறலாமா ? என்றார்

ம்ம்ம் கூறுகிறேன் டீச்சர் எந்த tnpsc exam வந்தாலும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கிரார்கள் இதில்18 வயது முதல் 40 வயது வரை exam எழுதலாம் என்று வரைமுறை இருக்கிறது அதில் நிச்சயம் வயது அதிகமானவர்கள் தேர்வாக மாட்டார்கள் அப்படியே தேர்வானாலும் பணம் கொடுத்து பதவியை முன்னவே தேர்வு செய்யப்பட்டிருக்கும் அப்படி பார்த்தால் இதெல்லாம் ஒரு கண் தொடைப்பு மாதிரி தான் என்று மக்களுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும் இருந்தும் இதில் அரசுக்கு கிடைக்கும் வருமானம் சுமார் .... 10 லட்சம் மக்கள் x ரூ 150 அல்லது ரூ 50 வைத்துகொள்வோம் இப்படியே போனால் சுமார் 22 ஆண்டுகள் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு ? இப்ப நினைச்சாலே கண்ணக் கட்டுது டீச்சர் 
இதை மாற்றி அமைப்பதே எனது குறிக்கோள் 

எப்படி 

சுருக்கமாகக் கூறுகிறேன் டீச்சர்
18 வயது முதல் 25 வயதுவரை உள்ளவர்களுக்கு exam தனியாகவும் 26 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு தனி exam மும் இரண்டிற்கும் விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட எண்ணிக்கை படிவம் மட்டுமே என்று கூறினால் அனைவரும் பயன் பெறுவார்களே

இது சாத்தியமாகுமா ? 

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லியே விற்பனை செய்வது சாத்தியமாகும் போது இது சாத்தியமாகாத டீச்சர் ?

வகுப்பே கை தட்டி ஆரவாரம் செய்தார்கள் ....

சென்ரியு !



பணத்தில்
தூலி கட்டி ஆடுகிறது
தாலி சரடு ...!

பாக்கியா 71 பிப்ரவரி 19-25 - 2016



வியர்வையில் வளர்கிறது 

வறுமையின் விதை ... 

துளிர்க்கும் நிம்மதி...!

பாக்கியா 49 பிப்ரவரி 12-18 !

எதை விதைத்தாலும்

விவசாயிக்கு கொசுராய் ... 

களைகள் ...!   

பாக்கியா 49 பிப்ரவரி 5-11 !



பழக்க தோஷம் 
வரப்பை தேடும் நாரை 
வழிதவறிய விவசாயி ...!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து !

மாநா புலவர்கள் மறையுமென்று சூளுரைக்க 
சாநா பலகையில் சமதர்ம வள்ளுவனை 
வாரி எடுத்துக் கொண்டு வஞ்சகசம்பு பொன்தாமரை 
குளத்தில்தள்ளி மெய்யுரைத்த பொய்யாமொழியும் நீயே 
கனியமுது மொழியால் வையம் ஆண்டுவான் 
கடல்தாண்டி ஆற்றவும் தொடுத்த வள்ளுவமாலை 
சூடாத வாயுமில்லை சுமக்காத ஊர்தியுமில்லையென 
சுற்றி திரியும் ஈரடி தந்த வாமனனும் நீயே 
உன்குறள் அளந்து உருவம் தரித்துத்  
தென்குமரி கங்கையில் தன்கடம் நனைய 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் வாயுறை வாழ்த்தும் பொதுமறையும் நீயே  
சமணனா கிறிஸ்துவனா பௌத்தனா என்றெல்லாம் 
சாதிபார்க்கும் பாதகர்முன் பாலினம் இரண்டெனப் 
பாரில் நிரந்தரமென நகைசெய்யும் உத்தர வேதம் 
பதினென்கீழ்கணக்கு மடுவில் சுரக்கும் முப்பாலும் நீயே 
காதல் மணக்கக் கலவியின்பம் வகுத்து 
ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அறம் பெருக்கி 
கூட்டுப் பொருள்தன்னை கூடிவாழ் இன்பமுடன் 
கழித்தெழுங்கும் சமூக சீர்த்திருத்த அறிஞரும் நீயே 
மரபுடைத்த இலக்கண மதுதனை உண்டு 
மாற்றங்கள் படைக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் 
புதுகவி படைக்கும் புலவனுக்கும் உன் ஏடே 
புதுவாழ்வு அளிக்கும் தெய்வ நூல் திருக்குறள் !

mhishavideo - 145