தலைத் தீபாவளி |
தடைபட்டுக்கொண்டே இருக்கிறது |
முதிர்கன்னி ! |
நெல்லை ஹெல்த்கேர் இதழ் ஜனவரி 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மறந்தது எனோ ?
பசியோடு பறந்து வரும் |
கொசுவை |
அடிக்க நினைக்கும் கைகள் |
பயிரால் அழியும் |
விவசாயிக்கு கைகொடுக்க |
மறந்தது எனோ ? |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பரணி அக்டோபர் - டிசம்பர் 2016 இதழில்
நுனிப் புல் |
மேய்ந்தபடி மான்... |
இரையானது சிங்கத்திற்கு ...! |
அகல் விளக்கு |
குறுகிய முகத்துடன் |
சாமி பொம்மை ....! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கிறிஸ்மஸ் பாடல் !
குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் |
குதித்து குதித்து
மகிழ்ந்து பாடி ஆடுங்கள் |
தொழுவத்திலே பிறந்தவரே பாருங்கள் |
தெகிட்ட தெகிட்ட அல்லேலூயா கூறுங்கள் |
ஏழைக்கு இரங்கச் சொன்னவரை தேடுங்கள் |
எதிரியையும் நண்பனாக்க ஓடுங்கள் |
அல்லேலுயா அல்லேலுயா பாடுங்கள் |
அகிலம் காக்கும் ஞானத்தையே நாடுங்கள் |
ஜீவனுள்ள தேவனையே போற்றுங்கள் இயேசு |
ஜெபத்தை கேட்கும்
உள்ளங்களை தேற்றுங்கள் |
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - டிசம்பர் 2016
ஆயிரம் விளக்கு பகுதி |
பிரகாசமாய் எரியும் |
அரை ஜான் வயிறு ...! |
கடமை தவறாத சூரியன் |
கதறி அழுகிறது |
விவசாயி மனம் ...! |
அளவறிந்து விதைப்பவன் |
அறுக்கிறான் .... |
அளவில்லா செல்வத்தை ..! |
அன்ன தானம் |
பசியோடு நிற்கிறது |
கோயில் சிலை ...! |
அசையும் விழிகள் நடுவே |
அசையாமல் நிற்கிறது |
ஒர் கனவு ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அட்டைப் பக்கமாய் இரு !
உன் |
பிறப்பும் இறப்பும் |
புத்தகத்தில் தடம் |
பாதிக்க வேண்டுமானால் |
அட்டைப் பக்கமாய் இரு ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிந்திப்பீர் வாக்களிப்பீர் !
சரி நிகராய் அமர்ந்து |
சரசம் செய்ய |
அரசியல் ஒன்றும் |
அந்தரங்க மேடையல்ல பல |
சாமானியர்கள் அமர்ந்து |
சரித்திரம் படைத்த |
சமரச மேடை ! |
நீயா நானா வென போட்டியிட |
அரசியல் ஒன்றும் |
பொழுது போக்கு வியாபாரமல்ல |
பொறந்து வளர்ந்த |
தாய் நாட்டைக் காக்கும் |
பொக்கிச இருக்கை ! |
எடுத்தோம் கவிழ்த்தோம் |
வென இடம் பிடிக்க |
அரசியல் ஒன்றும் |
குடிக்கும் டம்ளர் அல்ல |
குடி மக்களின் |
குறைதீர்க்கும் கோபுரக்கலசம் ! |
இக்கரைக்கு அக்கரை பச்சையென |
இருப்பதை நிறுத்தி |
பண நாயகம் அழிந்து |
ஜனநாயகம் வாழ |
வாக்களிப்பீர் ! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Dr. J ஜெயலலிதா
ஆழ்ந்த இரங்கல்...!
"உலகிற்கோர் அம்மா இனி உன்னைப் போல்
உதவிட யாருமில்லை அம்மா
கனவுகள் மெய்ப்பட வைத்தவள் இன்று
கண்ணீரில் மூழ்கிட வைத்தாயே
நினைவுகள் நிலைத்திருந்த போதிலும்
உன் நிழலை மறைத்திட வைத்தாயே
என்றும் நீ நீட்டிய விரலைக் காணவில்லை
உன்னால் ஈட்டியவர்கள் எவரும் நீட்டவில்லையே
காட்டிக் கொடுத்தவரெல்லாம் உன் கண் முன்னே
காலம் பதில் சொல்லும் புதுமைப் பெண்ணே
Labels:
இரங்கல் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தகர்த்துவிட்டாள்
காதலிக்கும் போது | |
தன் ஆசையை | |
அடுக்கு மாடி கட்டிடம் போல் | |
அடுக்கிக்கொண்டேன் போனவள் | |
கல்யாணம் எனறதும் | |
ஆஸ்த்தியைக் காட்டி | |
அஸ்த்திவாரம் | |
சரியில்லை
என்று
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நினைவின் மொழி ...
எட்ட முடியா |
தூரம் தான் |
என தெரிந்தும் |
எப்படி |
ஒரே நேர் கோட்டில் |
சந்திக்கிறது |
நம் |
நினைவின் மொழி ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் டிசம்பர் 2016 மாத மின்னிதழ்.
குளிர்ந்த நீரோடை |
சூடாகவே இருக்கிறது |
உழவன் மனது ...! |
விடிஞ்சா கல்யாணம் |
வந்து சேரவில்லை |
தாய் வீட்டு சீதனம் ...! |
குழந்தையின் கரம்பட்டு |
நிமிர்ந்து நிற்கிறது |
ஊன்று கோல் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
உடையாத_நீர்க்குமிழி
கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: |
உடைந்தது கன்னிக்குடம் |
உடையாத நீர்க்குமிழி |
குழந்தை .... |
சீம்பால்
குடிக்கும் சிசுவின்
|
பசிக்கு தாயின் மறு பிறவி ... |
அழியா அட்சைய பாத்திரம் ! |
தாலாட்டு பாடும் தாயின் |
தியாகத்தில் பிறக்கும் |
தந்தையின் முதலெழுத்து ... |
அள்ள அள்ள குறையாத |
அறிவு பெட்டகம் ! |
புது குமிழி சூட்டில் |
மழைத்துளியாய் சிரிக்கும் |
மருமகள்... தலைமுறை |
பொக்கிஷத்தின் தாய்மடி ! |
பேரனோ பேத்தியோ வென |
ஏங்கும் பெற்றோருக்கு |
தாத்தா பாட்டியின் சொத்து ... |
உடைந்த மனதை ஊக்குவிக்கும் |
தியாகத்தின் முடிவுரை ! |
தளர்ந்த தாய் தந்தைக்கு |
வளர்ந்து ஆளாகும் |
மகனின் கைப்பிடிப்பு |
கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் ! |
மண்ணில் மக்கும் உடலும் |
சொக்கும் அழகும் என்றுமே |
உடையும் நீர்குமிழியென |
உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் ! |
Labels:
போட்டிகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கைவிரல் ...!
காதலியின் |
உருவம் வரைந்தேன் |
உயிர் கொடுத்தது |
கண்ணீர் துளிகள் |
துடைக்க முயலுகிறேன் |
இனித்தது கைவிரல் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
குருவிக் கூடு ...!
காற்று வந்து |
குறி சொன்னதும் |
அய்யோவென |
உதிரும் கிளைக்கு |
அடைக்கலம் கொடுத்தது |
குருவிக் கூடு ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பக்கத்து வீட்டு ரோஜா செடி !
முறிந்த காதலியின் |
முகத்தை நினைவு |
கூறுகையில் |
அதிர்வில்லா "அலைபேசியா " |
வருகையில்லா "வாட்ஸப்பா " |
டூவிட்ட "டுவிட்டரா " |
முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
வளர்ந்து விட்டது |
பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |
முறிந்த காதலியின் |
முகத்தை நினைவு |
கூறுகையில் |
அதிர்வில்லா "அலைபேசியா " |
வருகையில்லா "வாட்ஸப்பா " |
டூவிட்ட "டுவிட்டரா " |
முகம் காட்டிய "பேஸ்புக்கா " |
சிரித்துப் பேசிய "ஜிமெயிலா " |
என பட்டி மன்றம் நடத்துவதற்குள் |
வளர்ந்து விட்டது |
பக்கத்து வீட்டு ரோஜா செடி ! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருவி சிறப்பிதழ் - 2016
செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
மண் குதிரை |
ஏறி இறங்கியது |
சிறுவர் மனசு ...! |
தாண்டுவதற்குள் |
நீண்டுகொண்டே செல்கிறது |
வறுமை ...! |
கோரைப்புல் |
மினுமினுக்கிறது |
பனித்துளி ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முதல் அலை ...!
முதல் அலை |
முத்தமிட்ட |
ஈரம் காய்வதற்குள் |
இழுத்து வருகிறது |
இன்னொரு பேரலையை |
அடக்கி முத்தமிடுவதற்குள் |
அழித்துவிட்டது |
எதோ ஒரு கால் தடம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
விவசாயி மட்டும் ...!
பணப் பட்டு வாடா |
பால் பாக்கெட் போடும் முன்னே |
பாங்க் வாசலில் கூட்டம் |
அன்று |
கருவில் இருக்கும் குழந்தைக்கு |
சீட் வாங்க |
வரிசையில் நின்றான் |
இன்று |
பிறந்த குழந்தைக்காக சேமித்த |
பணத்தை மாற்ற |
வரிசையில் நிற்கிறான் |
அட மதிகெட்ட சமூகமே |
ஓசிக்கும் வரிசை |
காசுக்கும் வரிசை |
ஆனால் |
எந்த வாரிசுமே இல்லாமல் |
விவசாயி மட்டும் |
வரிசை வரிசையாக |
உயிரை இழக்கிறான் |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணன் பாட்டு ...!
கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் |
எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ |
தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை |
தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா ! |
எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை |
அமைதி காத்திட நீயருள்வாயோ ! என |
சொல்லி புலம்பிட வரவில்லை நான் |
சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா |
பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை |
பக்தராய் மாற்றிட மனமில்லையோ என |
கேள்வி கேட்டிட வரவில்லை நான் |
கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா |
கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் |
சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ |
எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ |
எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பரிசாக கொடுக்க ....!
நினைவையெல்லாம் |
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் |
நம் பதிவு திருமணமன்று |
பரிசாக கொடுக்க .... |
பயனளிக்காமலே பயன் பெற்றது |
பக்கத்து வீட்டு பெண்ணுடன் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - நவம்பர் 2016 !
புகை மூட்டம் |
நடுக்கத்துடன் |
இளங்குஞ்சு ...! |
வரப்பு இருந்த இடம் |
பரபரப்பாக பேசப்படுகிறது |
வீட்டு மனைகள் ...! |
கசக்கி எறிந்த குப்பையில் |
சிரிக்கிறது |
அழகு ஓவியம்...! |
அளவற்ற உலகம் |
அளந்தே வைத்தான் |
வயிற்றை ....! |
காட்சி தரும் கடவுள் |
ஆசி வழங்கும் பிச்சைக்காரன் |
கட்டண சலுகை ...! |
செடியின் வாசத்தை |
கிள்ளி வந்தது |
பறித்த மலரின் காம்பு.' |
கதவுகளற்ற வாசல் |
மூடிச் செல்கிறது |
மனஅழுத்தம்...! |
சாலை வியாபாரிக்கு |
வாசம் வீசுகிறது |
காகித பூ ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எங்க குல தெய்வமே ...!
குலசாமி திருவிழா இங்கே |
கூடியிருப்போருக்கு ஓர் விழா |
வானம் படியா போனவுங்களையும் |
வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா |
மண்ணும் பொண்ணாக |
மக்கள் பஞ்சம் காணாது |
நின்னு நிதானமாய் |
நொருப்பு பந்தம் கைபுடிச்சி |
வேட்டைக்கு போய் வரும் |
வீரகுல கருப்பனே .. உனக்கு |
உண்ணும் படையலிட்டு |
உருமி மேளம் குலவையிட்டு |
கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை |
காத்து நிற்கும் கருப்பனே |
நல்வாக்கு சொல்லுமையா |
வெள்ளாட்டம் குட்டி அடிச்சு |
ஓலப்பாயில் சோறு குவிச்சு |
எல்லைக் காத்த அய்யனாருக்கு |
எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு |
உண்ணா விரதமிருந்து |
ஊருக்கே பந்தியிட்டு |
ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து |
கரகாட்டம் ஒயிலாட்டமென |
கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை |
காக்கும் மாடனே உனக்கு |
காவு கொடுக்கும் சாமத்துல |
குறி கேட்க வந்தோமையா எங்கள் |
குறையெல்லாம் தீர்த்துவையும் |
எங்க குல தெய்வமே ...! |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஞாபகம் ...!
உனக்கும் எனக்கும் |
நடந்த சூர சம்ஹாரத்தில் |
காதல் என்ற வாழ்க்கை |
மட்டும் தான் அழிந்தது |
ஆனால்இன்னும் |
உயிர் பெற்றுக்கு கொண்டே தான் |
இருக்கிறது ஞாபகம் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியு,
தாண்டுவதற்குள் |
நீண்டு கொண்டே செல்கிறது |
வறுமை ...! |
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நெல்லை ஹெல்த்கேர் இதழ் நவம்பர் 2016 !
பட்டாசு ஆலை விபத்து |
ராக்கெட் வேகத்தில் |
உரிமையாளர் தலைமறைவு ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!
மரம் வெட்டிய களைப்பு |
நிழலை தேடுகிறது |
மனம் ...! |
செடியின் வாசத்தை |
காம்போடு கிள்ளி எரிகிறது |
விரல்கள் ...! |
தத்தெடுக்கின்ற பெயரில் |
அனாதையாக |
கிராமங்கள் ...! |
தொடு வானம் |
மெல்ல கண் சிமிட்டுகிறது |
நட்சத்திரங்கள் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ராசியால - ராசியான குடும்பம்
அம்மா நாளைக்கு தீபாவளி பாட்டி தாத்தாவை பார்க்க போகலாமா ம்ம்ம் போகலாமே உங்க அப்பா என்ன செய்றாரு கொஞ்சம் கூப்பிடு அப்பா அப்பா அம்மா கூப்பிடுறாங்க இங்க வருவீங்களாம்,அப்பா வந்தார்
என்னமா சொல்லு என்றார்
நான் உங்க அம்மாவை பார்க்க வரவில்லை நீங்களும் உங்க பிள்ளையும் போயிட்டு வாங்க
என்றதும்
ஆனந்தத்தில் அப்பாவும் மகளும் புதுத்துணியும் இனிப்பும் எடுத்துவைத்து
கிளம்பிப் போனார்கள்
அங்கு பாட்டி தாத்தாவை கண்டதும் கட்டி அனைத்து முத்தமிட்டாள் பேத்தி பின் பாட்டியிடம் பாட்டி பாட்டி நீங்களும் தாத்தாவும் வீட்டை விட்டு இந்த
முதியோர் காப்பகத்திற்கு வந்ததிலிருந்து அம்மா அப்பா இருவருமே ஒரே சண்டை ஒரே
கெட்டதாதான் நடக்குது பெரியப்பா பெரியம்மாவும் தனி குடுத்தனம் போய்ட்டாங்க
அண்ணனும் அக்காவும் இல்லாம நான் மட்டும் தனியா இருக்கேன் முன்னெல்லாம் நாம கூட்டுக் குடும்பமா இருக்கும் போது எவ்வளவு சந்தோசமா
இருந்தோம் அந்த சந்தோசம் இப்ப இல்லையே பாட்டி ஏன்?
பாட்டி சொன்னார் அது ஒன்றும் இல்லை நாம கூட்டுக் குடும்பமா இருக்கும் போது 12 ராசிகளும் ஒண்ணா
நம்மளோடையே குடித்தனம் பண்ணியது ஒருவருக்கு ஒரு ராசி கெட்டதைக் கொடுத்தாலும்
இன்னொருவருக்கு இருக்கும் நல்ல ராசி நல்லதைக் கொடுக்கும் அப்போது
குடும்பத்தில் இருக்கும் நல்லது கெட்டது சமநிலையாகி சந்தோஷம் பொங்கி பெருகியது
இப்போது எல்லோரும் தனித்தனியாக பிரிந்ததால் எல்லா கேட்டதும் தனித்தனியாக இருந்து
ஆட்டிப்படைக்கிறது என்று கண்ணீர் விட்டாள் பாட்டி
ஓ அப்படியா பாட்டி நல்லது இந்த உண்மையை நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
சொல்லி புரியவைத்து அடுத்த தீபாவளிக்குள் எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டில் கூட்டுக்
குடும்பமாக வாழ முயற்சிக்கிறேன்...
நன்றி பாட்டி ,
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
|
Labels:
சிறுகதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தாய் தந்தையரின் கனவு ...!
ஊரு விட்டு ஊரு போய் |
உல்லாசமாக வெடித்து சிதறும் |
பட்டாசு வெளிச்சத்தில் |
இருண்டு கிடக்கிறது |
மனித வெடிகுண்டாக வெடித்து சிதறிய |
தாய் தந்தையரின் கனவு ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நதிக்கரை_ஞாபகங்கள் ...!
லேசான
தென்றல் காற்று
|
சிலுசிலுக்கும் மீன்கள் கூட்டம் |
நடு நடுவே மெல்ல சிரிக்கும் தாமரை |
நூலறுந்த தூக்கணாங் குருவி கூடு |
அதை தாங்கி பிடிக்கும் கொடி மலர்கள் |
மின்னும் கோவைப் பழம், மிதந்து வரும் நீர் கோழி |
அத்தனையும் மறந்து நானிசைக்கும் |
ஆலமரக் குழலோசையில் நீ அழைத்த குயிலோசை |
உருவம் மறந்து நிழலையே வெறித்து பார்க்கும் கொக்கு |
கூடவே குதித்து விளையாடும் தவளை |
இதோ பாம்பென்று நானுரைக்க பதறிக் குதித்து |
நீயோட பட்டாம் பூச்சிகள் எல்லாம் |
சுற்றி வளைத்து சுத்திப்போட்ட அழகை நினைக்கையில் |
நிறுத்தற் குறியான கண்ணீரைக் கண்டு |
அடையவரும் பறவை கூட்டம் கீச் கீச் என்று கூச்சலிட |
அலறி எழுந்தேன் ,அந்தி சாய்ந்தது |
அழகு முலாம் பூசியது போல் |
ஆதவன் தன்னை மறைத்து |
அரும்பும் முத்து சுடராய் நிலவொளி வந்து |
முன்னும் பின்னும் உரசுகையில் உயிரே போகுதே |
நாம் உடனிருந்த நாட்களை நினைக்கையில் |
அத்தனையும் மறந்து அமைதியாக |
உறங்குகிறாய் நதிக்கரையில் ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காவேரியா இல்லை காவு வெறியா ?
காவேரியை |
இழுத்துப் பிடித்து |
கற்பழிக்கும் ஊடகங்களே |
நிறுத்துங்கள் ... |
கதவைப் பூட்டி |
சாவியை தொலைத்த |
தமிழினமல்லநாங்கள் |
கடன் வாங்கி விவசாயம் |
செய்ய |
கார் மேகம் இருக்கும் வரை |
கருணை பொழிந்துக் கொண்டே |
தான் இருக்கும் என்பதை |
மறந்து விட்டாயோ |
நில்.... |
கல்லணையின் ஒவ்வொரு |
உயர்வுக்கும் ஒரு தமிழனின் |
உயிர் பழிகொடுத்ததை |
நினைவு கூர்ந்தால் போதும் |
கள்ளச் சாவிப் போட்டு |
ஓளித்து வைத்திருக்கும் |
கல்லணையை திறக்கும் |
சக்தி என் தமிழ் தாயிக்குண்டு |
என்பதை மறந்து விடாதே |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பரணி இதழ் - ஜூலை - செப்டம்பர் 2016
துவண்ட பொழுதெல்லாம் |
உணர்த்திவிட்டு செல்கிறது |
மெளனம்...! |
மையிருட்டு |
வாசிக்க முடியாமல் திரும்புகிறது |
மின்மினி பூச்சிகள் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நானும் நீயும் ...!
நானும் நீயும் |
சேர்ந்து பயணித்த பாதையைக் |
கடக்கும் தருணத்தில் |
சட்டெனப் பூத்த |
பழைய ஞானங்களை |
பறித்து எடுத்து வைத்துக்கொள்ள |
போகும் போது தான் |
புரிந்தது பக்கத்தில் |
நீ இல்லையே என்று ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் அக்டோபர் 2016 ...!
கடுமையான குளிர் |
போர்த்திக் கொள்கிறது |
மேகம் ...! |
காட்டுக் கோயில் |
பூசாரியானான் |
ஆடு மேய்க்கும் சிறுவன் ...! |
மண் குதிரை |
ஏறி இறங்கியது |
சிறுவர் மனசு ....! |
மலையடிவாரம் |
கரைந்து கொண்டிருக்கிறது |
விவசாயின் கனவு ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் வாசல் - அக்டோபர் 2016 !
கொத்தி கொத்தி |
குளத்தை நீளமாக்குகிறது |
கொக்கு ....! |
கைமணம் மாறாத படையல் |
ருசிபார்க்கிறது |
அமாவாசை ...! |
பழையக் கோட்டை |
தவமிருக்கும் |
சிலந்திகள் ....! |
நினைவை தள்ளிவைத்து |
கனவை தேடுகிறது |
எதிர்காலம் ....! |
பைத்தியக்காரனின் வயிற்றை |
சுத்தம் செய்தது |
எச்சில் இலை ...! |
வரப்பு சண்டை |
மெலிந்துகொண்டே போகிறது |
காணி நிலம் ...! |
கரிசல் காடு |
நடவு பார்க்கிறது |
மயில் இறகு ....! |
மஞ்சள் காமாலை |
விலை கொடுத்தது |
மஞ்சள் கயிறு ...! |
காது குத்து திருவிழா |
காதறுந்த நிலையில் |
குலதெய்வம் ...! |
கொடி ஏற்றம் |
இறங்குகிறது |
ஊழல் ...! |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள் ...!
கழுவி கவிழ்த்த பாத்திரம் |
நிரம்பி வழிகிறது |
தாய்வீட்டு சீதனம்.....! |
அலையின் பாரத்தை |
இறக்கி வைக்கிறது |
கரை ஒதுங்கும் பாதச்சுவடுகள் ...! |
லாரியின் பின்னால் |
ஓடுகிறது |
மணலாறு ! |
ராமர் பானம் |
வானவில்லாக மாறும் |
சீதை ! |
தொடும் வானம் |
தாகம் தணிக்க . |
மெல்ல கொத்தியது பறவை ...! |
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஹைக்கூக்கள் ...!
கர்ப்பக்கிரகம் | |||
தாயைத் தேடும் | |||
கேவிலி சத்தம்…! | |||
மசூதியை தேடி | |||
மகாலட்சுமி மகன் | |||
ஏசுதாஸ்...! | |||
ஈர நிலம் தேடி | |||
அலைகிறது | |||
வரகு விதை ...! | |||
பரம்பரை பரம்பரையாக | |||
கூடுவிட்டு கூடு பாயுது | |||
வறுமையும் பசியும் ...! | |||
முன் நீளும் நிழல் | |||
பொய்த்துப்போனது... | |||
உலக அழகி மனம் ...! | |||
களையின் நிழலில் | |||
துளிர்விடுகிறது | |||
வெட்டி வேர் | |||
வில்லேந்திய ராமன் | |||
அகப்பட்டுவிட்டான் | |||
ராவணன் ...!
|
|||
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி