ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !



பனித்துளியாக மாறினேன்
என்னவள்
இதழ் விரிகையில் ...!
மின்னஞ்சல் தாக்கி
உயிரிழக்கவில்லை
கூகுள் ...!
வான் விழியில்
வர்ண ஜாலங்கள்
வாங்க மறுக்கும் குடை ...!
குளிரில் தவிக்கும் நதிக்கு
வெளிச்சம் கொடுக்கிறது
நிலவின் அரவணைப்பு …!
அழிவென்று தெரிந்தும்
ஆசை கொள்கிறது
அகிலம் ...!
ஆடும் கிளைகளை பார்த்து
ஓடுகிறது
சூரியன் ...!
தட்சணைச் சோற்றை தின்று
கொழுத்து திரிகிறது
கோயில் எறும்பு ...!
கிள்ளி எறிந்த கீரையில்
நிரம்பிக்கிடக்கிறது
அல்ல முடியாத நீர் சத்து ...!
கடவுளின் பெயரைச் சொல்லி
சாமிக்கு தாலி கட்டினார்
ஆசாமி ...!
மும்மதப் பிராத்தனை
சம்மதம் தந்தாள்
முதிர் கன்னி ...!
குறுகிய இரவு
நீண்டுகொண்டே போகிறது
காதலியின் ஏக்கம் ...!
சித்தர் மலை
தவமிருக்கும்
கஞ்சாசெடிகள் …!
அக்கினிப் பரிச்சை
வலம் வருகிறது
காற்று ...!
விரல் நுனி
திரும்பிப் பார்த்தேன்
இனித்தது வாழ்க்கை ..!

விடியலின் கொடுமை !



ஒளிந்து விளையாடும் 
கனவுக்கு 
தெரியாது 
விடியலின் கொடுமை !

தனக்குத் தானே 
பேசி மகிழும் 
கற்பனைக்கு 
தெரியாது 
காகிதத்தின் வலிமை !

இரவு பகல் பாரது 
இதயம் ஏங்கும் 
அழிவுக்கு  
தெரியாது 
கல்லறையின் பெருமை !

நினைவுகளை சுமந்து 
கனவுகளில் பறந்து 
இதயத்தில் அமரும் 
காதலுக்கு 
தெரியாது 
கண்ணீரின் இனிமை !

தெரிந்தும் தெரியாமல் 
அறிந்தும் அறியாமல் 
அங்கிங்கும் வாடும் 
உறவுக்கு 
தெரியாது 
காலத்தின் கடமை !

முத்தம் (முற்றம் ) ...!



காதலில் மட்டும் 
குறையாத முத்தம் 
கல்யாணத்திற்கு பின் 
மொத்தமாக குத்தகைக்கு 
எடுத்துக் கொண்டது 
என் வீட்டு முத்தம் (முற்றம் )

காதல் மழை ...!



அலைக்கும் ஆதவனுக்கும்
உள்ள நடப்பு
ஆவியாகி
காதல் மழை 
பொழிவதில் தான் 
சுழல்கிறது பூமி ...!

காலம் ...!


4200-beautyfull-blue-morpho-butterfly-hd-wallpaper.jpg

நாள் ஈசலானது 
வாரம் பட்டாம் பூச்சியானது 
மாதம் கருவானது 
இந்த மூன்றையும் 
ஆண்டு ஆளுகிறது காதல் ...!(காலம் )

mhishavideo - 145