காலடியில் கிடக்கும் ...!



இதழ் பிரிந்தால் சிரிப்பழகு 

இமை இணைந்தால் கனவழகு 

விரல் வரைந்தால் கவியழகு 

விதி அழிந்தால் வாழ்க்கையழகு 

மொழி உதிர்ந்தால் இசையழகு 

மௌனம் முடிந்தால் சாதனையழகு 

காதல் பிறந்தால் காலம் அழகு 

கருணை வளர்ந்தால் மரணம் அழகு 

முகம் மலர்ந்தால் காற்று  அழகு 

முதலும் கடைசியுமாய் 

அழகு மட்டும் முடிகிறது 

அன்பு மட்டுமே தொடர்கிறது 

மனிதா !

அன்புடன் இரு 

ஆகாயமே உன் காலடியில் கிடக்கும் ...!

2 comments:

  1. வணக்கம்
    அற்புதமான வார்த்தைகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145