நம் பிள்ளை ...!



அழகுக்கு ஆயிரம் பேரை 

எடுத்துக்காட்டலாம் 

அழகற்ற என்னை 

அழகுபடுத்திக் காட்டடுமே 

நம் பிள்ளை ...!

கானல் நீர் ...!


கானல் நீரையும் 

வடிகட்டி 

வாட்டர் சப்ளை செய்கிறது 

பக்கத்து வீட்டில் 

பதியம் போட்ட ரோஜாவுக்கும் ...!

என்றென்றும் ...!



சிந்தனை சிதறியதால் 
கவிதை பிறந்தது

சிற்பம் செதுக்கியதால் 
கலை சிறந்தது

எதைச் சிதறினேனோ 
எதைச் செதுக்கினேனோ

கவிதையுற்ற கலையாக 
பிறந்து சிறக்கிறாள் 
என்றென்றும் ...!

காலடியில் கிடக்கும் ...!



இதழ் பிரிந்தால் சிரிப்பழகு 

இமை இணைந்தால் கனவழகு 

விரல் வரைந்தால் கவியழகு 

விதி அழிந்தால் வாழ்க்கையழகு 

மொழி உதிர்ந்தால் இசையழகு 

மௌனம் முடிந்தால் சாதனையழகு 

காதல் பிறந்தால் காலம் அழகு 

கருணை வளர்ந்தால் மரணம் அழகு 

முகம் மலர்ந்தால் காற்று  அழகு 

முதலும் கடைசியுமாய் 

அழகு மட்டும் முடிகிறது 

அன்பு மட்டுமே தொடர்கிறது 

மனிதா !

அன்புடன் இரு 

ஆகாயமே உன் காலடியில் கிடக்கும் ...!

சாதிப்பதற்காகவே ...!

மழை 
பிரிவுக்காக இல்லை 
பரிவுக்காக பொழிவது போல் 
காதலும் 
சாதிக்காக இல்லை 
சாதிப்பதற்காகவே பிறந்தது ...!

மக்கள் சரித்திரத்தில் ...!



எந்த தெய்வத்திற்கு
கும்பாபிஷேகமோ 

நைவேய்த்தியமானது
மழை 
தீப ஆராதனை காட்டியது 
மின்னல் 
கெட்டிமேளம் கொட்டியது 
இடி 
மந்திரம் ஓதியது 
இயற்கை 
வரமாகப் பெற்ற காணிக்கை மட்டும் 
சாபமானது 
மக்கள் சரித்திரத்தில் ...!

அடிப் பிரதட்சணம் ...!



Sri Divya in Half Saree

காதலை ஜெயிக்க 

அடிப் பிரதட்சணம்  செய்த நான் 

காதலனை ஜெயிக்க 

அமைதிகாக்க மறந்துவிட்டேன் ...!

அம்மா ...!

சேலை கட்டும் பெண்கள் 

மத்தியில் 

சேவை செய்யும் பெண் 

இவள் மட்டும் தான் 

அம்மா ...!

தொண்டைக் குழியில் ...!

NENJIRUKKUM VARAI

பிரிவின் பசிக்கு 

தீணிபோட்டது 

கண்ணீரில் வெந்த இதயம் 

வடித்துவிட்டேன் 

உண்ண முடியவில்லை 

உண்டுவிட்டால் 

ஜீரணமாகி செத்து விடுவேனோ 

என்ற 

தயக்கம் மட்டும் 

தாகமாக நிற்கிறது 

தொண்டைக் குழியில் ...!

பார்வை நேரம் ...!

Image result for doctor patient clipart

பார்வை நேரம் 

குறிக்கப்பட்டிருந்தாலும் 

நோயாளிகளிடம் 

குருடனாகவே நடந்து கொள்கிறார்கள் 

மருத்துவர்கள்  ...!

பொன்னு விளையிற பூமி ...!





பாலித்தீனுகும் பறவைக் காச்சலுக்கும் 
மதிப்பு கொடுக்கும் நீ 
பழைய சேற்றுகும் பானை பொழப்புக்கும் 
மதிப்பு கொடுக்க மறந்ததேன் 
சேலை நெய்ய பருத்தி வேண்டும் 
ஓலை நெய்ய தென்னை வேண்டும் 
வேலை செய்ய நிலம் வேண்டும் 
வியர்வை சிந்த விவசாயம் வேண்டும் - நீ 
எட்டடுக்கு மாடியிலும் எட்டி பார்க்கும் பொன்னியரிசி
 நீ ஆறடி போகையிலே 
அள்ளிப் போட வேணுமட வாக்கரிசி 
பாஸ்ட் புட்டு காலமெல்லாம் 
பாடை கட்டப் பார்க்குது இந்த பாதை 
மாறி வாழ்ந்து பார்த்தால் 
பாவ மன்னிப்பு கிடைக்குது 
ஏழு லோகம் சுத்தி வந்த 
என்ன பெத்த ராசா நீ 
என்னாதான் சம்பாதிச்சாலும் 
வாயிக்கு ருசியா ஆக்கிப்போட 
வேணுமடா அரிசி கொஞ்சம் லேசா 
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் 
மாறி போனது அன்று இனி 
வீட்டுக்கொரு விவசாயம் செய்வோம் 
மாறப்போகுது இன்று 
உழவனுக்கு திருநாளாம் அதுவே 
ஊரெல்லாம் வருடத்தின் முதல் நாளாம் 
உழவும் இப்பே இல்லேனான  நாம 
உயிர் வாழ்வது சில நாளாம் 
ஆடு மாடு கூட்டம் போல 
வீடு மாடி பெருகுது குழந்தைங்க 
ஓடி ஆடி விளையாட 
ஒற்றை மாடி தான் மிஞ்சப்போகுது 
சுதந்திரமெல்லாம் இயந்திரமாய் 
மாறி வரும் காலத்தில் 
சுகாதார கேட்டாலே 
சுடுகாடாய் நாற்றம் வீசப் போகுது 
பேனா பிடிக்கும் கையாலே 
ஏர் பிடிக்க கத்துக்கோடா தோழ நீ 
ஏழை தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய் 
வாழ்ந்து காட்ட வாடா 
விவசாய விஞ்ஞனியா வாடா 
புரட்சி செய்வோம் 
புரட்சி செய்வோம் வாடா 
பொன்னு விளையிற பூமியிலே 
பொருள விளையவைப்போம் வாடா


எங்கு பார்த்தாலும் ...!



எங்கு பார்த்தாலும் 

மரமாய் நிற்கிறாய் 

கொடிய் போகிறாய் 

பூ வாய் மனக்கிற 

நீ 

உயிரற்ற உணர்வை தந்துவிட்டு 

உடலற்று எங்கு போனாயோ ...!

பளுதூக்கிய பேனா ...!



பல கவிஞர்கள் 
பளுதூக்கிய 
பேனாக்களில் 
சிலவை தான் 
விருதானது 
பலவை 
இன்னும் விதையாகவே 
வாழ்கிறது மண்ணில் ...!

மனம் வீசும் திரவத்தால்



மனம்  வீசி விட்டு 
மரணமிக்கும் பூவைப்போல 
மனிதனும் 
மரணமித்துக்கு கொண்டிருக்கிறான் 
மனம் வீசும் திரவத்தால் ...!

mhishavideo - 145