சென்ரியு.


பார்வையால் 
ததும்பியது நிறைகுடம்
இடையழகு ...!

அடித்த வெள்ளத்தில் 
மூழ்கியது 
மதுக்கடை போராட்டம் ...!
இரண்டு பொண்டாட்டிக்காரன் 
எழுதினான் 
ஸ்ரீராமஜெயம் ...!
பணத்தில் தெரியாத ஜாதி 
தெரிந்தது 
பத்திரிகையில் ...!

கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் - 44

விரைவுச் செய்திகள் 
மறைத்தது 
விளம்பரம் ...!
வெற்றி மாலை 
உதிர்ந்ததும் 
தோல்வியில் நார் ...!
இடையழகைக் கண்டு 
ததும்பியது 
நிறைகுடம் ...!
புதிய தலைமுறையின் 
கோயிலானது 
பழைய வீடு ...!

வள்ளுவனே ...!



மயிலையில் உதித்த ஆதவனே என்றும் 
மாணவர் போற்றும் தேவனே !

வான் புகழ் பொழிந்த வள்ளுவனே என்றும் 
வையகம் போற்றும் முதல்வனே !

தேன் மலர் கசிந்த தமிழனே என்றும் 
தேவலோகம் போற்றும் புலவனே !

முப்பால் சுரந்த மூலவனே என்றும் 
மூவுலகம் போற்றும் நாயனானே !

ஈரடி யளந்த வாமனனே என்றும் 
ஈகை போற்றும் திருகவிஞனே !

வல்லரசு பிறக்கட்டும்...!

உச்சி காற்றை தொடும் 
பறவையின் எச்சத்தில் 
பிறக்கும் 
பசுமையை அழிக்கும் 
மனித இனமே ! 
நீ 
கட்சி காற்றை தின்று 
பாமரரின் எச்சில் 
சோற்றில் 
பிறக்கும் வரிதலைமையை 
அழிக்க மறந்ததேனோ ?
சிந்தியுங்கள் ...
நிலைமையை மாற்றுங்கள் 
ஊழல் இல்லா 
வெளிச்சத்தில் 
உலா வரட்டும் நம் 
கிழக்கு சூரியன் !
நிந்தியுங்கள் ...
சமதர்ம சாம்ராஜ்யத்தில் 
சிரித்து மகிழும் 
இரவு காற்றில் உலா வரும் 
ஜாதி மதங்களிடமிருந்து 
சுதந்திரம் பிறக்கட்டும் !
இனிமேலும் வேண்டாம் 
இளைய சமூகமே 
வான் முறை 
துணை கொண்டு 
வன் முறை அழியட்டும் 
வல்லரசு பிறக்கட்டும்...!

மீண்டும் மீண்டும் ...!

மாண்டோர்கள் மீண்டதில்லை
மானிடனே
மனதில் தோன்றும்
மாண்புகள் மீள்கிறது
அரியணை சுகத்திற்கு
அரிவாள் வெட்டு
ஆண்மை சுகத்திற்கு
பாலியல் மொட்டு
பணத்தை ஆளும் 
ஜாதிக் கட்டு - இதை 
படித்துக் காட்டுகிறது 
பட்டணத்து சிட்டு 
என பாவங்கள் 
மீண்டும் நீண்டு கொண்டே இருக்கிறது 
நதியுதவிக்கு நிதியுதவி
நானும் நீயும் செத்தால் 
பணவுதவி  - இதை 
எண்ணிப் பார்க்கிறது 
வானிலை மறுவி 
எழுதிக் காட்டுகிறது 
தேர்தல் துருவி 
என கர்மங்கள் 
மீண்டு நீண்டு கொண்டே போகிறது 
மதுவே எங்கள் 
மாநிலத்தின் வித்து 
என உரக்க கத்துது பார் 
குடும்ப குத்துவிளக்கு 
குடிக்காவிட்டால் 
குடும்பம் கெத்து இதுவே 
மனைவிமார்களின் சொத்து 
என அறிந்தும் 
அழிவை தேடும் அதர்மங்கள் 
மீண்டும் நீண்டு கொண்டே செல்கிறது 
மீண்டும் மீண்டும் 
வானம் 
பொழிவதை மறக்கவில்லை 
பூமி 
விளைவதை நிறுத்தவில்லை 
சாமி 
வணங்குவதை மாற்றவில்லை 
காற்று 
வீசுவதை அளக்கவில்லை 
ஆனால் 
காமத்திலும் ஏமத்திலும்
சாமத்திலும் 
அடுத்தவனை கொன்று 
படைத்தவனையே மிஞ்சும் அளவிற்கு 
பிறந்து பிறந்து இறக்கும் 
மனிதன் மட்டும் 
மாறிவிட்டான் ...!
                                                  -

கல்லறையில் ...!



கல்யாணத்தில் 
முடியாதெனத் தெரிந்தும் 
காதலை சுமக்கும் 
இதயங்கள் 
பிரசவமாகிறது 
கல்லறையில் ...!

பிரிப்பதில்லை ...!



விடை பெறாத காற்று
இடை விடாத வானம்
எடை குரையாத பூமி
தடைபடாத நீர்
அளவிடாத தீ 
இவைகள் மட்டும் 
பிரிப்பதில்லை 
ஜாதி மதம் இனம் மொழியென ...!

விடுமுறையே இல்லை ...!



பள்ளி கல்லூரி 
அலுவலகம் அரசாங்கம் 
இவைகளுக்கு 
விடுப்பு விட்டாலும் 
விடுமுறையே இல்லை 
ஊழலுக்கு மட்டும் ...!

கலிகாலம் !



கடலை விற்று 
கடனை அடைக்கும் 
காலம் வரும் போது 
கார் மேகமே 
கடனாகக் கூட 
களைந்து விடாதே 
பிழைத்து விடும் கலிகாலம் !

மருதாணி ...!

மருதாணி ஏன் பூசுகிறோம்?

மச்சானை நினைத்து 
அரைத்து வைத்த 
மருதாணி சிவப்பில் 
தோன்றும் 
கரும் புள்ளியைக் கண்டு 
பித்தம் என 
கேலி செய்யும் தோழிக்கு 
எப்படி 
புரியவைப்பேன் 
எனக்கு மட்டுமல்ல 
என் விரல்களுக்கும் 
பித்து பிடித்திருக்கிறது என்று ...!

அணைகள் ...!



எனக்காக ...
சண்டையிட்டோர் எத்தனை 
ஜாதி கலவரத்தில் 
சமாதியானோர் எத்தனை 
கட்சி பெயரைச் சொல்லி 
களவாடியவர்கள் எத்தனை 
அத்தனை பேருக்கும் சேர்த்து 
அமைதியாக 
தூங்கிக் கொண்டிருந்த நான் 
இப்போது 
அடை மழை என்ற பெயரில் 
ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறேன்  
எங்கே இன்று .... 
சண்டையிடுங்கள் பார்ப்போம் 
தண்ணீர் தரமுடியாது என்று 
அவ்வளவு தான் 
அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள் 
என்றது அணைகள் ...!

கார்த்திகை பெண்ணே ...!



கார்த்திகை பெண்ணே 
எனக்கு மட்டும் 
எட்டியிருந்தால் 
நிலவை கொண்டு 
விளக்கேற்றியிருப் பேன் 
விடியும் வரை ...!

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !



பனித்துளியாக மாறினேன்
என்னவள்
இதழ் விரிகையில் ...!
மின்னஞ்சல் தாக்கி
உயிரிழக்கவில்லை
கூகுள் ...!
வான் விழியில்
வர்ண ஜாலங்கள்
வாங்க மறுக்கும் குடை ...!
குளிரில் தவிக்கும் நதிக்கு
வெளிச்சம் கொடுக்கிறது
நிலவின் அரவணைப்பு …!
அழிவென்று தெரிந்தும்
ஆசை கொள்கிறது
அகிலம் ...!
ஆடும் கிளைகளை பார்த்து
ஓடுகிறது
சூரியன் ...!
தட்சணைச் சோற்றை தின்று
கொழுத்து திரிகிறது
கோயில் எறும்பு ...!
கிள்ளி எறிந்த கீரையில்
நிரம்பிக்கிடக்கிறது
அல்ல முடியாத நீர் சத்து ...!
கடவுளின் பெயரைச் சொல்லி
சாமிக்கு தாலி கட்டினார்
ஆசாமி ...!
மும்மதப் பிராத்தனை
சம்மதம் தந்தாள்
முதிர் கன்னி ...!
குறுகிய இரவு
நீண்டுகொண்டே போகிறது
காதலியின் ஏக்கம் ...!
சித்தர் மலை
தவமிருக்கும்
கஞ்சாசெடிகள் …!
அக்கினிப் பரிச்சை
வலம் வருகிறது
காற்று ...!
விரல் நுனி
திரும்பிப் பார்த்தேன்
இனித்தது வாழ்க்கை ..!

விடியலின் கொடுமை !



ஒளிந்து விளையாடும் 
கனவுக்கு 
தெரியாது 
விடியலின் கொடுமை !

தனக்குத் தானே 
பேசி மகிழும் 
கற்பனைக்கு 
தெரியாது 
காகிதத்தின் வலிமை !

இரவு பகல் பாரது 
இதயம் ஏங்கும் 
அழிவுக்கு  
தெரியாது 
கல்லறையின் பெருமை !

நினைவுகளை சுமந்து 
கனவுகளில் பறந்து 
இதயத்தில் அமரும் 
காதலுக்கு 
தெரியாது 
கண்ணீரின் இனிமை !

தெரிந்தும் தெரியாமல் 
அறிந்தும் அறியாமல் 
அங்கிங்கும் வாடும் 
உறவுக்கு 
தெரியாது 
காலத்தின் கடமை !

முத்தம் (முற்றம் ) ...!



காதலில் மட்டும் 
குறையாத முத்தம் 
கல்யாணத்திற்கு பின் 
மொத்தமாக குத்தகைக்கு 
எடுத்துக் கொண்டது 
என் வீட்டு முத்தம் (முற்றம் )

காதல் மழை ...!



அலைக்கும் ஆதவனுக்கும்
உள்ள நடப்பு
ஆவியாகி
காதல் மழை 
பொழிவதில் தான் 
சுழல்கிறது பூமி ...!

காலம் ...!


4200-beautyfull-blue-morpho-butterfly-hd-wallpaper.jpg

நாள் ஈசலானது 
வாரம் பட்டாம் பூச்சியானது 
மாதம் கருவானது 
இந்த மூன்றையும் 
ஆண்டு ஆளுகிறது காதல் ...!(காலம் )

தோழா - நீ



    வறண்ட நிலத்தை
வாங்கிடும் தோழா - நீ
வகைவகையான
விதைகள் விதைத்தால்
விளைந்திடுமா தோழா

     உழுத நிலத்தில்
வீடுகட்டும் தோழா - நீ
உடைத்து மீண்டும்
விதைக்க நினைத்தால்
வளமாகிடுமா தோழா

     காட்டை அழித்து
காற்று வாங்கிடும் தோழா -நீ
கார் மேகத்தை
கிழித்து பார்த்தால்
மழை பொழிந்திடுமா தோழா

     கண்ணீரை விற்று
கடவுளை வாங்கும் தோழா -நீ
கதிரவனை மறைத்து
கார் மேகத்தை
வாங்கிட முடியுமா தோழா

     எண்ணியதெல்லாம்
எடுத்துக்கொடுக்கும்
பூமியிருக்கு தோழா - நீ
எழுந்து இன்றே வளமாக்க
எண்ணிவிடு தோழா ...!

சீரழியும் பண்பாடு ...!

வாழ்க்கையில் 
ஒளிந்திருக்கும் 
பண்பாட்டை 
மீட்டெடுக்க 
முயற்சிப்பதற்குள் 
கடிந்து கொண்டிருக்கிறது 
காலத்தின் அலச்சியத்தோடு
சுருங்கிக்கொண்டே 
செல்லும் ஆடை 
அலங்கராத்தில் 
நிரம்பி வழியும் 
மதுக்குடுவைகள் 
தள்ளாடிக் கொண்டிருகிறது 
தன்மானத்தின் கண்ணீரோடு
வானம் பூமி 
தவிர வரைமுறைகள் 
எல்லாம் வழி தவறும் 
உறவு முறையில் 
உலவிக் கொண்டிருக்கிறது 
இன்னொரு உறவை 
முறித்துவைக்கும் முயற்சியோடு
ஓவியமோ காவியமோ 
வரைந்து முடிப்பதற்குள் 
வழிந்துகிடக்கிறது 
அங்கிங்கும் அரைகுறை 
கலை நயத்தோடு
கட்டடக்கலை 
படித்து அரிவதற்குள் 
முடித்துவிட்டது 
பிணமா பணமா 
என்ற பட்டிமன்றத்தோடு
இப்படி ...
எல்லாம் அறிந்த மனம் 
காலத்தோடு இணையும் 
கர்ம வினையைத் தேடி 
எதிர்த்து நிற்கிறது 
ஏமாறவில்லை காலன் ...!

கடைப்பிடிப்பீர் இளைய சமூகமே ...!



பொழுது விடியும் முன்னெழுக  
    புழுதிப் பறக்க ஓடிடுக 
குளிர்ந்த நீரில் குளித்திடுக 
    குல தெய்வத்தை வணங்கிடுக 
காலை உணவு புசித்திடுக 
    கடமை யாற்றப் புறப்படுக 
அறிவு சிறக்கப் படித்திடுக 
    ஆசிரியரை என்றும் மதித்திடுக 
கண்ணீர் துடைக்கப் பழகிடுக 
    கனிதரும் மரமாய் வளர்ந்திடுக 
காந்தி வழி நடந்திடுக 
    கர்ணன் புகழ் பாடிடுக  
காலம் தவறாது உழைத்திடுக 
    கருப்புப் பணத்தை ஒழித்திடுக 
பாவங்கள் செய்வதை நிருத்திடுக 
   பாரதி தமிழை போற்றிடுக  
ஆபத்து காலத்தில் உதவிடுக 
    அப்துல்கலாம் கனவை நிஜமாக்கிடுக 
அகிலம் செழிக்க மரம்நடுக  
    அத்திமரம் போல் இனித்திடுக 
ஏளனம் செய்வதை மறந்திடுக 
    ஏழைக்கு உதவ நினைத்திடுக 
சாலை விதியின் துணையோடு 
    சமூக நலன் காத்திடுக !

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய
கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய
 போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த
எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன்
எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

சமயோசித புத்தி காரி ...!



மௌனத்தை மட்டுமே 
பரிசளித்துவிட்டு 
சம்மதத்தை 
சண்டைக்கு கொடுத்துவிட்டு 
செல்கிறாள் 
சமயோசித புத்தி காரி ...!


முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!



கணினிக்கேது
கட்டுப்பாடு
கண்ணகி பிறந்த
மண்ணில் கலவிக்கு
வேண்டும் கட்டுப்பாடு
அலைவரிசையில்
புலன் பெயரும்
அண்ணன் தங்கை
காதலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
எளியவர் பயணத்தில்
வலியவர் கொள்ளும்
சில்மிஷத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
காக்கைக்கும்
தன் குஞ்சு
தாய் குஞ்சு
என உணர்த்தும்
அப்பாக்களுக்கு
வேண்டும் காட்ப்டுபாடு
ஏழைகளின்
கோமணத்தை
களைந்து
சாசனத்தில்
தோள் கொடுக்கும்
அரசியலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
மக்காத நெகிழி 
மதுகுவலையில் 
குடித்து மடியும்
அஸ்தமனங்களின்
ஆண்மைக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
அங்கத்தை அளக்கும்
தங்கத்தின் மோகத்தை
தணிக்கும் சமூகத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
சர்வமத கூட்டனியில்
ஆதிகம் செலுத்தும்  
ஜாதிகளுக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
சமுகமே 
நீ பாடு நீ பாடு
தமிழர் பண்பாடு
நீ கூடு வெறும் கூடு
மரணித்தப்பின் எலும்புக்கூடு
இதை புரிந்து 
ஓடு நீ ஓடு
தமிழர் பண்பாட்டை
காக்க ஓடு ...!

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

மகாகவி மாத இதழ் - செப்டம்பர் - 2015.



திசைக்கு ஒரு ஜாதி 
வழிகாட்டியது
தபால் காரனுக்கு 
என்றும் பழைய ஆறு 
புதுப்பொலிவுடன் 
அரசியல்வாதி 
முத்தான தமிழ் 
வெட்கப்பட்டுகிடக்கிறது 
சிப்பிக்குள் ...!
ஆங்காங்கே தெரிகிறது 
வறுமைக் கோடு 
வரைபடத்தில் ...!
யாருக்கு கும்பாபிஷேகம்
நைவேத்தியம் செய்கிறது 
மழை ...

mhishavideo - 145