அமிலத்தில் ஆடிய அனிச்சம்...!



இரத்தத்தில்

ஜெனித்தேன் !


வனவாசக் காலம் 

முடிந்து 


வண்ணத்துப் பூச்சாக

வட்டமிட்டேன் 

கல்லூரி சோலையில் !


என் 

கள்ளங் கபடமில்லா 

கன்னி அழகைக் கண்டு 

காதல் வசப்பட்ட 


கள்வனின் பார்வையில் 

கனவை இழந்து 

கதறுகிறேன் 


அவன் தூவிய அமிலத்தில் 

ஆகாயத்தைத் தொடும் 

அனிச்சம் மலராய் ...!



3 comments:

  1. நெஞ்சை வருடிய வரிகள் .....

    ReplyDelete
  2. ;((((( கொடுமையாகத்தான் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கொடுமைகள் மாறும் ...

      வருகைக்கு நன்றிகள் ஐயா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145