கண்ணோடு காடுகள் ...!



கண் மலை பறவைக்கு
இமை இலைக் 
காடானாய் 

இன்பத்திலும் துன்பத்திலும் 
இடியுடன் கூடிய 
மழையானாய் 

காய் கனியுடன் கலந்து 
கவியானாய் எங்கும் 
காலங்கள் பூத்திடும் 
காற்றானாய் ...!

மொழியுடன் கலந்து 
இசையானாய் எங்கும் 
மூச்சாய் வாழ்ந்திடும் 
இறையானாய் ...!

இயற்கை எழில் மிகும் 
வனமானாய் எங்கும் 
நீயே உயிரின் 
முதலானாய் ...!

மண்ணேடு காடுகள் 
மறைந்து வீடானால் 
கண் மலை எங்கே 
பேசும் இமை மழை எங்கே 
சொல் சொல் மானிடா...? 





4 comments:

  1. அழகு... அருமை...

    முடிவில் நல்ல கேள்வி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமையான கவிமழை! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145