கடலலை போல் காதலர்கள் ...!



கடலலை போல் காதலர்கள் 
குவிந்த மணலில் காதலலைகள்  உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி  
கழுவிய நொடியில் தழுவிய 
கணங்கள் ரணங்களாய்  மாறி 
கரைதனிலே ஒதுங்கும் 
நுரைகளாய் பெருகுகிறது காதல் !

அணைகள் தந்த உறவுகள் எல்லாம் 
அழிவாக எண்ணுகிறது அங்கே 
ஆதரிப்போர் யாருமின்றி தவிக்கையில் 
அனாதையாகிறது காதல் 
அழிந்தும் பிழைக்கிறது 

வலிகளோடு விழிகள் கோர்கையில்  
மொழிகள் இல்லை இன்று 
வரவுகளோடு செலவுகளை பார்க்கையில் 
நிரந்திரமில்லை காதல் 
நினைவுகளுமில்லை 

உண்மையான அன்பிற்கில்லை 
ஒரு முறைக் காதல் அதை 
உணர்ந்தபின்பும் திரும்பவில்லை 
தலைமுறைக் காதால் 

ஒரு முறை தான் காதல் எனது 
தமிழர் பண்பாடு அந்த ஒன்றுடன் 
பூச்சியம் சேர்வது தான் காதல் பண்பாடு 
என்றது இளமையும் முதுமையும்  



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145