குற்றால குறவஞ்சியே...!


அடியே பெண்ணே ...?
உன் இதழ்கள் செங்காந்தாள்
உன் விரல்கள் குவளை
உன் வெட்கம் வெட்சி
உன் வருகை வாகை
உன் சிரிப்பு ஆத்தி
உன் விழிகள் வகுளம்
மொத்தத்தில் நீ முல்லை

இதில் கைதியானேன்
கைதை மலராய் அந்த ஒரு
நொடியில் நீ
கொன்றை மலராய் மாறியதால்
என் இதயம்
அவரை பூவின் குருதியில்
துடிக்கும்

காதல் இசையில்
சண்பகம் பூவாய் வாழ்கிறேன்
என் குற்றால
குறவஞ்சியைக் கண்டு
குழுகுழு காற்றில்
கவிதை தென்றலாய் !


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145