காதலுக்கு மொழி இல்லை .!


மனதில் உள்ள வார்த்தைகளை
மௌனத்தினால் பூட்டினேன்
உன் மௌனத்தில் நானும்
மயங்கியதால் ஆம் ....!

உருவம் இல்லா காதலை
இரு பருவம் கொண்ட
இதயங்கள் பரிமாறியதால்
மொழி இழந்த நாதமாய்
மௌனத்தில் பூக்கிறது காதல் ....!

என்றோ பிற மொழிகள்
சேரும் போது அன்றே அவரவர்
தாய் மொழிகள் தடம் மாறி
வாய் மொழியாய் வாழ்கிறது
இந்த மொழியில்லா காதலர்களிடம் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145