நானும் ஓர் புதியவள்...!


விதைகள் அறியா
மன்றத்தில்...
நானும் ஒரு
மலராகிறேன்..!

உருவத்தில் தமிழ்
உள்ளத்தில் கற்பனை
உயிருள்ள கவிதைக்கு
உறவாய் வாருங்கள்
உணவாய் பருகுங்கள்

கனவாய் தோன்றும்
கணினியில் இரு
கண்ணாய் காண்கிறேன்
என் முன்னாள் தோன்றும்
நினைவுகளை நனவுகளாய்
மாற்றும் தமிழ் மன்றத்தில்...

குறையேதும் இருப்பின்
குறைவில்லாமல் தாருங்கள்
நிறையாக பெற்று உங்கள்
நெஞ்சில் நீங்கா இடம் பிடிப்பேன்
நானும் ஓர் புதியவள்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145