காதலித்தேன் உன்னை
வேறு காதல் கிட்டியதால்
கை விட்டாய் என்னை
காதலித்தாய் என்னை
பழைய காதல் வெட்டியதால்
கை பிடிக்க மறுத்தேன் உன்னை
ஆனால் என்
கண்ணில் சோகம்
நம் காதலில் பாவம்
என் தேகம் வாடியது
தென்றலில் நீ சொன்ன
கண்ணீர் துரல்கள் கண்டு
மோகம் கூடியது நீ
மோதும் சுவாச
தீண்டலின் போது
அன்பே
விடை பெற முடியாமல்
அணைக்கிறேன்
ஆருயிராய் பேசும்
அன்பு மூச்சினை
துடிக்கிறேன்
ஒருயிராய் பேசும்
இதயத் துடிப்பினை
என் காதல் உண்மை
நீ
என்னை மறந்தும்
மறவாமல் வந்ததால் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...