துண்டு கவிதைகள்...!


தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்
------------------------------------------------
களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்
------------------------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
------------------------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
------------------------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
------------------------------------------------


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145