காதலிக்கவில்லை
காதலித்தேன் ஒரு
கவிஞ்னாய்
என் கண்ணில் பட்ட
அழகழகான
ஆத்மாக்களை
ஆசை வைத்தேன்
அவரவர் விழிகளில்
ஐந்து நொடி வாழ
நடந்தது
என் கற்பனையில்
எல்லாம்
சாயமே இல்லா
சடலங்களாய்
அழுதேன் புரண்டேன்
கேட்கவில்லை
கடவுளுக்கு
கேட்டால்
கொடுத்திருப்பார்
நிஜமான காதலை
என்
நெஞ்சத்தில் பூத்து
மலர் மஞ்சத்தில்
காயித்து
பழுக்கும் பழமாய்
வெளுக்கும் மனதில்
வெண்ணிறப் பூக்களாய்
ஆனால்
இல்லையே
அதுவும் கனவாய்
போனதே
எண்ண செய்வேன்
என் விதியை
நினைத்து
இப்போது
மருந்தாய் வாழ்கிறேன்
வாழ்க்கையை
தேடியபடியே
வாலிபத்தை இழந்து
வார்த்தையை வர்ணிக்கும்
வயதான கவிதையாய் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...