பெண்ணே எழு நீ இடியாக...!


எறும்பாய் கடித்து இறந்தாலும் நீ
கரும்பாய் சுவைக்கும் கயவர்களுக்கு விருந்தாகதே

சிவப்பு சிலிண்டரில் சிதறினாலும் நீ
சிவப்பு விளக்கில் அணைந்து போகாதே

விலை கொடுத்து வாங்கும் இளைஞனுக்கு
உன் அங்கத்தை விடைகொடுத்து தூங்கதே

படையெடு பெண்ணே உன் ......

சிறைப்பட்ட வாழ்க்கையை நீக்கி யாவரும்
சிரம்பற்ற வாழந்து காட்டு

உடை களைந்த நாணலை உன்
உயிர் கலந்த வீரத்தில் பூட்டிக்காட்டு

நவ சமுத்திரத்தின் திறவுகோலாய்
நீ வான் சென்று வையம் வென்று ....

தேன்கொண்ட நிலாவில் நீ தோள்கொண்ட
தமிழச்சியாய் தோன்றி பாழ்கொண்ட
பஞ்சாங்கத்திற்கு பகுத்தறிவு புகுட்டிக்காட்டு

அடுப்பில் வெந்தும் நீ துடுப்பாய் மாறும்
படிப்பை தின்று பாரே உன் பதுமையின்

தாய் மண்ணில் சற்று தலை சாயிக்கிறேன்
கருமத்தை தின்று அதர்மத்தை கொன்று
தர்மத்தை வென்ற பாரதிப் பெண்ணாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145