திசைகள் தோறும் இசை.!


இசையில் மயங்கா நிழலுமில்லை
இதயம் உறங்கா உறவும்மில்லை
வசியம் செய்யும் மருந்தாய்
வரம் பெறுகிறேன் ...!

உன் வாய் மொழி சேருகையில்
என் தாய் மொழியாய் பாடுகிறேன்
ஊர்மொழி தோறும் சென்று ...!

செவி மொழியாய் நீ
செயல் இழந்த நேரத்தில்
உயிர் மொழியாய் உள் நின்று
உறங்குகிறேன் உன் துயர் நீங்க....!

பிழை மொழியாய் வாழும் மனிதன்
தன் சுய மொழியாய் மாறி
பிற மொழி இசையிலும் இனிதென
கண்டு எனதொருவாய் கேக்கும்
வடமொழியாய் வாழ்கிறேன் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145