கா.ந.கல்யாணசுந்தரம்
நல்ல பெயர் ......
வயதில் முதியவர் ஆனால்
வார்த்தை கோர்ப்பதில் இளையவர்
விண்ணையும் மண்ணையும் தாண்டி
விளக்காய் ஏற்றும் கவிதையில் சிறந்தவர்
கடலாய் இருக்கும் ஈகரையில்
கவிதை அலையாய் கரை சேர்க்கும் கவிஞர்
முத்து முத்தாய் பதியும் பதிவுகளுக்கு
சொத்து சொத்தாய் வாழ்த்தும் வள்ளல்
நிறையோ குறையோ அதில் நிதனமாய்பேசி
நிறைவடையும் நெஞ்சம் கொண்டவர்
அரட்டை பல கண்டு அதிக மதிப்பில்
அடையாள கவிஞ்கராய் இதோ
பொன்முக சிரிப்பில் புத்துயிர்
தந்த தமிழுக்கும் வழிகாட்டியாய்
வாழ்த்து மடலில் வானம் தாண்டும்
வாத்தியாரே உங்கள் தமிழ் சிறக்க
இந்த ஈகரை தோழி ஹிஷாலீயின்
வாழ்த்துகள் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...