கிராமத்து கானம் ....!


கோழி மிதிச்சு
குஞ்சு மிதிச்சு
கொக்கரக்கோனு
கூவுது சேவல் கூவுது சேவல்

காலம் முழிச்சி
கதிரவன் உதிச்சி
காற்றும் பேசுது
பூவிடமே பூவிடமே

என் கண்ணுமணி
கண்ணும் முழிச்சி
பாலும் குடிக்குது
மச்சானே மச்சானே

நேர மணியும்
நெல்லு மணியும்
ஓலை அனுப்பி
சேலை விரிக்குது
அத்தானே அத்தானே

மாலை வேலை
முடிஞ்சி சோலை
மயிலுக்கு மானாமல்லியும்
வாங்கிவரவே
ஆசை இழுக்குது
அத்தானே அத்தானே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145