தாலாட்டுப்பாடல் ...!


ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

கதிரறுக்கும் களத்திலே - கண்ணே
காலை பசு வந்து போகுதப்பா

முளை பிஞ்சிக் கொல்லையிலே - கண்ணே
முயல் ஓடி போகுதப்பா

பட்டு சேலை தொட்டினிலே - கண்ணே
படுத்து உறங்கும் பொன்மணியே

பச்சைக்கிளியும் பாடிவரக் - கண்ணே
பட்டு ராசா நீயுறங்கு

பாடும் அம்மா பக்கத்திலே - கண்ணே
பருப்பு சோறும்ங் கிண்ணத்திலே

தேனும் பாலும் பல வகையாம் - கண்ணே
தேவிட்டாமலே உண்டுறங்கு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145