ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
கதிரறுக்கும் களத்திலே - கண்ணே
காலை பசு வந்து போகுதப்பா
முளை பிஞ்சிக் கொல்லையிலே - கண்ணே
முயல் ஓடி போகுதப்பா
பட்டு சேலை தொட்டினிலே - கண்ணே
படுத்து உறங்கும் பொன்மணியே
பச்சைக்கிளியும் பாடிவரக் - கண்ணே
பட்டு ராசா நீயுறங்கு
பாடும் அம்மா பக்கத்திலே - கண்ணே
பருப்பு சோறும்ங் கிண்ணத்திலே
தேனும் பாலும் பல வகையாம் - கண்ணே
தேவிட்டாமலே உண்டுறங்கு
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...