நதியே ..!


நிமிர்ந்தே நடந்தேன் நிலாவில் - உயிரே
நீயும் ஓர் நாள் என் உலாவில்

மழையும் கடந்தேன் பலாவில் - உன்
மடியில் தவழ்ந்தேன் கனாவில்

அறியும் சுவையாய் நடந்தேன் - பின்
அணையும் மொழியாய் தவழ்ந்தேன்

கனியும் கவிதையும் கடந்தேன் - என்
காதல் சுவையில் மறைந்தேன்

இனிமை இதழில் நுழைந்தேன் - என்
இதயம் நீயே என்று உணர்ந்தேன் நதியே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145