தனி பட்டவளாய் தலை குனிந்து
நின்ற என்னை
உன் வசப்பட்டவளாய் தலை
நிமிர்ந்தேன் ....!
உன் ஒளி பட்ட கணமே
என் உயிர் தொட்ட இடத்தில்
மொழி பட்ட காதலாய்
முணுமுணுத்தேன்....!
அந்நொடி முதல் வலி பட்ட
ஆனந்தத்தில் பேர் சொல்லும்
காதலாய் வாழ்கிறேன்....!
உன் பின் நின்று முன் செல்லும்
முதல் பெண்ணாய் !
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...