யார் பெரியவர் ...?


விவரம் அறிந்தேன்
என் வீட்டில் தமக்கையை விட
தான் பெரியவள் என்று ....

பள்ளி சென்றேன்
சக மாணவர்களை விட
நான் தான் உயர்ந்தவள் என்று

தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று

காலம் கடந்தது
கல்லூரிக்கு சென்றேன்
என் கண்ணெதிரிலே
உள்ள கயவர்களை கண்டு
கல்வி புகுட்ட போட்டியிட்டேன்
அனைவரையும் விட
நான் பணக்காரி என்று

காதலில் என்னை மறுத்து
என் தோழியை தேர்ந்தெடுத்த போது
அவளை அடியேடு
அழிக்க வேண்டும் என்ற
ஆவல் கொண்டேன்

திருமணக் கைகோர்த்த
சொந்தத்தில் நான் தான்
முதலிடமாய் வாழ
குறுக்கு வழியில்
முயற்சி கொண்டேன்

அண்டை வீட்டின்
அனைவரின் போக்கில்
தானே முன்னுரிமை கொள்ள
பல தீமையும் நன்மையாய்
எண்ணி என் பின்னே
சுற்றிவர ஆசை கொண்டேன்

பிள்ளை பெற்று பேரும் புகழும்
ஈட்ட பெருமிதம் கொண்டேன்
இப்படி எல்லாம் கொண்டேன்
என் தனியொரு மனித
வாழ்க்கையில் இது ஞாயமா ?
என்று வினாவிய போது

ஆட்சிக்கும் அவர் எதிரிக்கும்
நடக்கும் போராட்டத்தின்
விருப்பு வெறுப்பு
சரியே என்று சற்று
சலனப் பட்டேன்

இருந்தும் அது சாத்திய மற்ற
மக்களின் சாதனையில் பூக்கும்
சமரச மேடை இதில் நடிப்புகள்
இல்லை எல்லாம் மாயை ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145